சனாதிபதி கிம் யோங் இல் பயணிக்கும் பிரத்தியோகமான ரெயினில் வைத்தே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து அவரது உடல் சனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிம் யோங் இல் சனாதிபதியாக இருக்கும்போதே இருண்ட இடமாகவும் ,புலனாய்வு தகவல்களை இலகுவில் பெற்றுவிட முடியாததாகவே வடகொரியாவை வைத்திருந்ததார். ஆனால் இறப்பின் பின்னும் அவர் புலனாய்வு நிறுவனங்களுக்கு நன்றாகவே தண்ணி காட்டி உள்ளார்.
இதனிடையே இன்று தென்கொரியர்களால் இராட்சத பலூன்களில் பல்லாயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் வடகொரியாவை நோக்கி வீசப்பட்டன.ஒரு சனாதிபதி மரணமடைந்ததையே தெரியாமல் இருந்தவர்கள் துண்டு பிரசுரம் வீசி என்ன பயன்.