இதற்கு முன்பு எல்லைப் பிரச்சினைகள், படைகள் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கடந்த நவம்பர் 28,29 திகதிகளில் சீனா இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக திட்டமிட்டிருந்தது.
ஆனால் டெல்லியில் நடந்த சர்வதேச புத்த மாநாட்டில் தலாய் லாமா கலந்து கொண்டதனால் பேச்சுவார்த்தையை சீனா தள்ளிப் போட்டது.
இந்நிலையில் சீனவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ, நேற்று(5.12.2011) அளித்த பேட்டியில் கூறியதாவது, தலைநகர் டெல்லியில் வரும் 8 ஆம் திகதி இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை நடக்கும். அதில் சீனா சார்பில் இராணுவ உயர் அதிகாரி மா ஷியா வோடியான் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.