பாகிசுதான் நாட்டில் உள்ள சாம்ச விண்ணுந்து தளத்திலிருந்து அமெரிக்கப்படைகள் விலக ஆரமப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேட்டோ தாக்குதலில் 24 பாகிசுதான் படையினர் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்க படையினர் அவ்விமான தளத்திலிருந்து வெளியேறுகின்றனர். அவ்விமானத்தளத்திலிருந்து 15 நாட்களில் அமெரிக்க படையினர் வெளியேற வேண்டும் என்று பாகசுதான் காலக்கெடு விதித்திருந்தது. இந்த விமானத்தளம் பலுச்சசுதான மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ளது.
இதனிடையில் நேட்டோ தாக்குலில் 24 பாகசுதான் படையினர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று தொலைபேசி மூலம் பாகசுதான் அதிபருக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார். ஆனால் ஒபாமா மன்னிப்பு கோரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும் அது குறித்து வருந்துவதாகவும் ஒபாமா கூறினார். இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் பேணிவருவது என்று இரு தலைவர்களும் உறுதி தெரிவித்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேட்டோ தாக்குதல் விவகாரத்தால் அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைவதை அனுமதிக்க முடியாது’ என, அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
யெர்மனியின் பான் நகரில் ஆரம்பமான ஆப்கானிசுதான் எதிர்காலம் பற்றிய சர்வதேச மாநாட்டை புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கிலாரி கிளின்டன் கேட்டுக் கொண்ட போதும் அக்கோரிக்கையை, பாகிஸ்தான் தலைமை அமைச்சர் யூசுப் கிலானி நிராகரித்து விட்டார்.