கனிமொழி இன்று(3.12.2011) மதியம் ஒரு மணி அளவில் சென்னைக்கு வந்தடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கனிமொழியை அவரது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதி நேரில் சென்று வரவேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
டெல்லியிலிருந்து செல்லும் முன் கனிமொழி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், சென்னைக்கு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. பிணைக் கிடைத்ததைக் காட்டிலும் நாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று நிரூபிப்பதே எங்களுக்கு முக்கியம் என்று கனிமொழி கூறியுள்ளார்.