28.11. 2011 -சுமார் ஆறு மாத கால சிறைவாசத்தின் பின்னர் டில்லி உயர்நீதிமன்றத்தில் யகமீன் பெற்றுள்ள கனிமொழி இன்று இரவு அல்லது நாளை காலை திகார் சிறையில் இருந்து வெளிவருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அவர் இன்று இரவு வெளிவந்தாலும் டில்லியில் தங்கியிருந்து விட்டு நாளை சென்னை கிளம்புவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் கலைஞரின் குடும்பத்தினர் கனிமொழியை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதில் ஸ்டாலின் குடும்பத்தினர் பங்கேற்கிறார்கள். அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் சென்னைக்கு விரைந்து வருவதாகவும் நாளை சென்னை வரும் கனிமொழியை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர்கள் நேரில் சென்று வரவேற்பார்கள் என்று தெரிகிறது. ஆனால் இந்த கனிமொழி யாமீன் விவாகரத்தில் கருணாநிதியின் இன்னொரு மகனான மு.க. அழகிரி கண்டு கொள்ளவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.