இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த பிரச்னையை அமெரிக்க அரசின் கவனத்துக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் கொண்டு சென்றது.
சர்ச்சைக்குரிய பகுதியை எப்படி பாகிஸ்தானில் சேர்த்து வரைபடம் வெளியிடலாம் என அமெரிக்காவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, அந்த வரைபடத்தை அமெரிக்கா வாபஸ் பெற்றது.
இது பற்றி அமெரிக்க அரசின் குறிப்பிட்ட துறையின் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலந்த் நேற்று கூறுகையில், ‘இந்தியாவின் வரைபடம் தவறாக வரையப்பட்டுள்ளது எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
தவறான படம் வெளியானதில் எந்த உள்நோக்கமும் இல்லை’ என்றார்.