841. |
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு. |
842. |
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம். |
843. |
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. |
844. |
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. |
845. |
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும். |
846. |
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. |
847. |
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. |
848. |
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய். |
849. |
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. |
850. |
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும். |