ஈரான் மீதான தாக்குதல் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என்று இஸ்ரேலின் சனாதிபதி சிமொன் பெறெஸ் தெரிவித்ததை அடுத்து ரச்யாவின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் அணுவாயுத் திறனை இரகசியமாகப் பெற்றுள்ளதா என்பது பற்றி ஐநாவின் அணுவாயுதக் கண்காணிப்புக்குழு இவ்வாரம் தனது அறிக்கையை வெளியிடவிருக்கிறது.
நாளை செவ்வாய்க்கிழமையோ அல்லது புதன்கிழமையோ சர்வதேச அணுசக்தி ஏஜன்சி வெளியிடவிருக்கும் அறிக்கையில் ஈரானினால் மறுக்கமுடியாத அளவு சாட்சியங்கள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பொதுமக்களின் தேவைக்கான மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான அணுசக்தி செயற்றிட்டத்தை மட்டும் தான் செயற்படுத்தி வருவதாக ஈரான் வலியுறுத்தி வருகின்றது.
அணுவாயுதங்கள் தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்றும் தனது நாட்டுக்கு எதிராக பல்கோண அவமதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமெரிக்கா இதனை மேற்கொண்டு வருவதாகவும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார்.