இமயமலையில் 2,800 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 125 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த நிலையில் லுக்லா பகுதியில் மோசமான தட்ப வெப்ப நிலை நிலவுகிறது.
அங்கு கடும் பனி பெய்கிறது. இருட்டான மேகமூட்டம் காணப்படுகிறது. இதனால் அங்கிருந்து காத்மாண்டு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
எனவே விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே மலையேற வந்த வெளிநாட்டு மலையேறும் வீரர்கள் லுக்லா நகரில் கடந்த 4 நாட்களாக சிக்கி தவிக்கின்றனர்.
எவரெச்ட் சிகரத்தில் ஏற முடியாமலும், காத்மாண்டுக்கு திரும்ப முடியாமலும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு தங்கி உள்ளனர். இவர்களுடன் சுற்றுலா பயணிகளும் உள்ளனர். இவர்களுக்கு போதுமான அளவு உணவு கிடைக்காததால் பசி பட்டினியுடன் வாடுகின்றனர்.
இது குறித்து லுக்லாவில் உள்ள டென்சிங் கிலாரி விமான நிலைய தலைவர் உத்சவ்ராச்காரல் கூறும் போது, இங்கு சிக்கி இருப்பவர்களுக்கு உடல் ரீதியாக எந்த ஆபத்தும் இல்லை. காத்மாண்டு திரும்புவதற்காக கடந்த 4 நாட்களாக இங்கு உள்ளனர் என்றார்.