குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

இமைய மலைச்சிகரத்தில் சிக்கித் தவிக்கும் இரண்டாயிரம் வீரர்கள்

07.11.2011-உலகிலேயே மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாகசம் செய்ய உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மலையேறும் வீரர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் வடகிழக்கு நேபாளத்தின் சொலுக்கொம்பு மாகாணத்தில் உள்ள லுக்லா என்ற இடத்தில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர். இது எவரெச்ட் சிகரத்தின் நுழைவு வாயிலாகும்.

இமயமலையில் 2,800 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 125 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த நிலையில் லுக்லா பகுதியில் மோசமான தட்ப வெப்ப நிலை நிலவுகிறது.

அங்கு கடும் பனி பெய்கிறது. இருட்டான மேகமூட்டம் காணப்படுகிறது. இதனால் அங்கிருந்து காத்மாண்டு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

எனவே விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே மலையேற வந்த வெளிநாட்டு மலையேறும் வீரர்கள் லுக்லா நகரில் கடந்த 4 நாட்களாக சிக்கி தவிக்கின்றனர்.

எவரெச்ட் சிகரத்தில் ஏற முடியாமலும், காத்மாண்டுக்கு திரும்ப முடியாமலும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு தங்கி உள்ளனர். இவர்களுடன் சுற்றுலா பயணிகளும் உள்ளனர். இவர்களுக்கு போதுமான அளவு உணவு கிடைக்காததால் பசி பட்டினியுடன் வாடுகின்றனர்.

இது குறித்து லுக்லாவில் உள்ள டென்சிங் கிலாரி விமான நிலைய தலைவர் உத்சவ்ராச்காரல் கூறும் போது, இங்கு சிக்கி இருப்பவர்களுக்கு உடல் ரீதியாக எந்த ஆபத்தும் இல்லை. காத்மாண்டு திரும்புவதற்காக கடந்த 4 நாட்களாக இங்கு உள்ளனர் என்றார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.