01.11.ர் 2011 மோதல்களின் போது பாரியளவு ஆயுதங்கள் ..லிபியாவில் காணப்படும் பாரியளவிலான ஆயுதங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கொலை செய்யப்பட்ட லிபிய அதிபர் முஹம்மர் கடாபியின் ஆட்சிக் காலத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
கிளர்ச்சிப் படையினருக்கும் கடாபி இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களின் போது பாரியளவு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்களில் பெருந்தொகையானவை களவாடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறு களவாடப்பட்ட ஆயுதங்களை கண்டு பிடிக்க வேண்டியது லிபியாவின் புதிய ஆட்சியாளர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று என ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
நேட்டோ கூட்டுப்படையினர் பெருமளவிலான ஆயுதங்களை அழித்துள்ளனர். எவ்வாறெனினும், எவ்வளவு தொகை ஆயுதங்கள் இன்னமும் புழக்கத்தில் காணப்படுகின்றது என்பது இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை.
விமானங்களைத் தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கம் சர்வதேச அதிகாரிகளுடன் இணைந்து இரசாயன ஆயுதங்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் ரஸ்யா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானம் ஏகமானதாக உறுப்பு நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அல் கய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடும் எனவும், இவ்வாறு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் பாரியளவில் அழிவுகள் ஏற்படக் கூடு;ம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.