இந்நிலையில் குவான்டாஸ் நிறுவனம் தனது சேவைகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்திருப்பது பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. குவான்டாஸ் நிறுவன நிர்வாகத்தின் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சியளிப்பதாக ஒஸ்ரேலிய போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
குவான்டா நிறுவனத்திடம் 64 விமானங்கள் சேவையில் உள்ளன. அவற்றில் 36 உள்ளுர் சேவைகளிலும் 28 சர்வதேச சேவைகளிலும் ஈடுபடுத்தப்பட்டன. தினசரி 7000 பயணிகளை ஏற்றி இறக்குவதில் இச்சேவைகள் ஈடுபட்டு இருந்தன. உலகம் முழுவதும் 22 விமான நிலையங்கள் ஊடாக இதன் சேவைகள் இடம்பெற்று வந்தன.
தொழிற்சங்க நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அனைவரும் தொழிற்சங்க நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களும் திங்கட்கிழமை மாலையிலிருந்து வெளியில் நிறுத்தி வைக்கப்படுவார்கள் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பயணத்தை மேற்கொண்டுள்ள விமானங்கள் அந்த பயணங்களை நிறைவு செய்து கொள்ளும். அதன் பின்னர். அவ்விமானங்கள் பயணங்களை மேற்கொள்ளாது என்று பிரதம நிறைவேற்று அதிகாரி இலன் ஜொய்ஸ் தெரிவித்தார்.
தொடர் வேலை நிறுத்தங்களினால் குவான்டாஸ் விமான சேவை பாதிப்படைந்துள்ளது. பொதிகளை கையாளுபவர்கள், பொறியியலாளர்கள், மற்றும் விமானம் ஓட்டிகள் சம்பந்தப்பட்டுள்ள இவ்வேலைநிறுதத்தினால் ஒரு வாரத்திற்கு 15 மில்லியன் ஒஸ்திரேலியன் டொலர்கள் (அமெரிக்க டொலர்கள் 16 மில்லியன்) இழப்பு ஏற்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனது பயணத்தை முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் மறு அறிவித்தல் வரை விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என்று விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு பணமும் திருப்பிக் கொடுக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஓகஸ்ட் மாதம் தொடக்கம் உறவுகள் சீரற்ற நிலையில் காணப்பட்டது. சேவைகளை மீள அமைப்புச்செய்வது மற்றும் சில சேவைகளை ஆசியாவிலிருந்து அகற்றுவது தொடர்பாகவே உறவு பாதிப்புக்குள்ளானது.