இதுதொடர்பான உத்தரவை மத்திய அமைச்சரவை செயலாளர் அயீத் சேத் மூலமாக பிரதமர் வெளியிட்டுள்ளார். அதன்படி பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும்போது பிரணாப் அல்லது ப.சிதம்பரம் ஆகியோரில் ஒருவர் அரசின் பொறுப்பை பார்த்துக் கொள்வார்கள்.
அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்திற்கு இவர்களில் யாராவது ஒருவர் தலைமை தாங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் பிரதமர் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக செல்லவுள்ளார். நவம்பர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை பிரான்ஸில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். பின்னர் நவம்பர் 11, 12 ஆகிய நாட்களில் மாலத்தீவில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
நவம்பர் 18 முதல் 20ம் தேதி வரை கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் பிரதமர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதையடுத்தே தற்போதைய அறிவிப்பை மத்திய அமைச்சரவை செயலாளர் வெளியிட்டுள்ளார்.