குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

பிரதமர் நாட்டில் இல்லாவிட்டால் பிரணாப் அல்லது சிதம்பரம் அவரது பணிகளைப் பார்ப்பர்

 25.10.2011.திருவள்ளுவர்ஆண்டு.2042..மத்தியரசு  பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போது அவரது பணிகளையும், பிரதமரின் தினசரி அலுவல்களையும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அல்லது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரில் ஒருவர் பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வெளிநாடு போயிருக்கும் சமயத்தில் இவர்கள் இருவரில் ஒருவர் டெல்லியில் தங்கியிருப்பார்கள் என்றும் அரசின் தினசரி அலுவல்களை இவர்களில் ஒருவர் பார்த்துக் கொள்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான உத்தரவை மத்திய அமைச்சரவை செயலாளர் அயீத் சேத் மூலமாக பிரதமர் வெளியிட்டுள்ளார். அதன்படி பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும்போது பிரணாப் அல்லது ப.சிதம்பரம் ஆகியோரில் ஒருவர் அரசின் பொறுப்பை பார்த்துக் கொள்வார்கள்.

அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்திற்கு இவர்களில் யாராவது ஒருவர் தலைமை தாங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் பிரதமர் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக செல்லவுள்ளார். நவம்பர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை பிரான்ஸில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். பின்னர் நவம்பர் 11, 12 ஆகிய நாட்களில் மாலத்தீவில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

நவம்பர் 18 முதல் 20ம் தேதி வரை கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் பிரதமர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதையடுத்தே தற்போதைய அறிவிப்பை மத்திய அமைச்சரவை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.