குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

தனி விமானத்தில் வந்து சிறப்பு கோர்ட்டில் முதல் முறையாக யெ. ஆயார்- 3 மணி நேரமாக விசாரணை

21.10.2011 தனி விமானத்தில் வந்து சிறப்பு கோர்ட்டில் முதல் முறையாக யெ. ஆயார்- 3 மணி நேரமாக விசாரணை  சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் யெயலலிதா இன்று காலை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆயரானார். முற்பகல் 11 மணி முதல் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது. உச்சநீதிமன்றத்தின் கிடுக்கிப் பிடி உத்தரவைத் தொடர்ந்து முதல்வர் யெயலலிதா இன்று காலை தனி விமானம் மூலம் பெங்களூர் கிளம்பினார்.

பெங்களூர் பழைய எச்ஏஎல் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து கார் மூலம் ஒசூர் ரோட்டில் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்யயுனய்யா முன்பு ஆயாரானார்.

யெயலலிதாவுடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது தோழி சசிகலாவும், சசிகலாவின் உறவினர் இளவரசியும் ஆயாரானார்கள். அதன் பின்னர் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா விசாரணையைத் தொடங்கினார்.

யெயலலிதா மீது சுமத்தப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில் அவர் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அந்தக் கேள்விகளுக்கு தனது தரப்பு விளக்கத்தை அளித்தார் யெயலலிதா.

அவை பதிவு செய்து கொள்ளப்பட்டன. பெரும்பாலான கேள்விகளுக்கும் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை, உண்மைக்குப் புறம்பானவை என்று யெயலலிதா மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

முற்பகலில் தொடங்கிய விசாரணை தொடர்ந்து நீடித்து வருவதால் பரப்பன்ன அக்ரகாரா சிறை வளாகத்திற்கு வெளியே குழுமியுள்ள நூற்றுக்கணக்கான அதிமுகவினரிடையே பரபரப்பு நிலவுகிறது.

மீடியாக்களும் கூட விசாரணை நீடித்து வருவது குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்துள்ளனர். விசாரணை நீடித்து வருவதால், இன்றைக்குள் அது முடியாது என்றும், நாளையும் கூட தொடரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

முன்னதாக இன்று காலை 11 மணிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆயாராக வேண்டும் என யெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்யுனய்யா உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார் யெயலலிதா.அதில் தனக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யவில்லை.

அதுகுறித்து தனக்கு எந்தத் தகவலையும் கர்நாடக அரசு தரவில்லை. போதிய பாதுகாப்பு இல்லாததால் என்னால் இப்போது போக முடியாது. 2 வாரங்களுக்கு இதைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆனால் யெயலலிதாவுக்கு செய்யப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக அரசின் சார்பிலும், காவல்துறை டியிபி சார்பிலும் விரிவான பதில் அளிக்கப்பட்டது.

இதை ஏற்ற உச்சநீதிமன்றம் யெயலலிதாவுக்குக் கண்டனம் தெரிவித்தது. மேலும் இன்று குறிப்பிட்டபடி முதல்வர் யெயலலிதா நிச்சயம் கோர்ட்டில் ஆயாராக வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.

யெயலலிதாவின் பாதுகாப்புக்காக, சிறப்பு நீதிமன்றத்தையே தற்காலிகமாக இடம் மாற்றியுள்ளனர். இதற்காக இன்று காலை 8.50 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானத்தில் பெங்களூர் கிளம்பினார் யெயலலிதா.

அவரது விமானம் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கிருந்து கார் மூலம் கோர்ட்டுக்கு வந்தார். காலை பத்தரை மணிக்கு யெயலலிதா நீதிபதி மல்லிகார்யுனய்யா முன் ஆயாரானார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.