குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 9 ம் திகதி வியாழக் கிழமை .

முயற்சியால் முன்னேறிவரும் முன்னாள் போராளி.

01.04.2023...செல்வராசா வசந்தகுமாரி, முன்னாள் போராளி..!பூநகரி முழங்காவில் பிரதேசத்தில் இருக்கும் குமுழமுனை எனும் கிராமத்தில் வசிக்கிறார். 2009 இறுதி போரின்போது கைதாகி, புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்படுகிறார்.

 

2010 செப்டம்பரில் விடுதலையான அவர், பாடசாலை ஒன்றில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். அதேவேளை தொண்டு நிறுவனம் ஒன்றிலும் பணிபுரிகிறார். கிராமங்கள்தோறும் சென்று, வாழ்வின் அடிமட்டத்தில் இருக்கும் பெண்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிவது இவரின் பணியாகும்.

கணவனை இழந்த அல்லது கணவரால் கைவிடப்பட்ட பலநூறு பெண்களை வசந்தகுமாரி சந்திக்கிறார். அவர்களோடு பேசுகிறார். அப்பெண்களின் துயரக்கதைகள் இவரின் மனதை வாட்டுகிறது. அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற ஏதாவது செய்தாக வேண்டும் என முடிவெடுக்கிறார்.

தொழிற்சாலை ஒன்றை நிறுவி, பலருக்கு வேலை கொடுக்கலாம் எனும் எண்ணம் தோன்றுகிறது. அதன்விளைவாக, ‘எபினேசர் தும்புத் தொழிற்சாலை’ எனும்பெயரின் தனது தொழில்கூடத்தை தொடங்குகின்றார். இடையே வேறொரு தும்புத்தொழிற்சாலையில் இயந்திர இயக்குனராகப் பணிபுரிந்த அனுபவம், வசந்தகுமாரிக்கு கைகொடுக்கிறது.

தொடக்கத்தில் 4 பெண்களுக்கு மட்டுமே அவரால் வேலை கொடுக்க முடிந்தது. ஆனால் தனது தொடர் முயற்சிகளால் தொழிற்சாலையை விரிவாக்கியவர், இன்று 15 பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கிறார். தும்பு உற்பத்தியுடன் சேர்த்து, கால்மிதி, கயிறு, எண்ணை போன்ற இன்னபிற உற்பத்திகளிலும் ஈடுபடுகிறார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி தனது தொழிலையும் பாதித்ததாக வசந்தகுமாரி குறிப்பிடுகிறார். போதியளவு ஏற்றுமதி வாய்ப்புக்கள் கிடைத்தால், மேலும் பல பெண்களின் வாழ்வாதாரத்தை தன்னால் உயர்த்தமுடியும் என்று நம்பிக்கையோடு தெரிவிக்கிறார்.

கடந்த ஆண்டில் ‘சிறந்த தொழில் முயற்சியாளருக்கான விருதும் சான்றிதழும்’ இவருக்குக் கிடைத்திருக்கிறது.

‘பிறப்பும் இறப்பும் மட்டுமே நம்மைத் தேடிவரும். ஏனைய அனைத்தையும் நாமே தேடிக்கொள்ள வேண்டும்’ என்கிறார் நமது முயற்சியாளர் செல்வராசா வந்தகுமாரி.

அதன்படி தானும் முன்னேறி, ஏனைய பெண்களின் வாழ்வையும் முன்னேற்ற நினைக்கும் இவரின் முயற்சிகள் மென்மேலும் வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.