குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

டோக்யோ ஒலிம்பிக்: உடுப்பின்றி குளிக்குமாறு இந்தியர்களிடம் சப்பானியர்கள் கூறியபோது

12.08.2021...அர்விந்த் சாப்ராசப்பானியர்களுக்கு குளிப்பது மிகவும் பிடிக்கும் என்று நான் கேள்விப்பட்டிருக் கிறேன். சூடான நீரில் குளிப்பது அவர்களது பாரம்பரியம் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அது நம்பிக்கையுடன் தொடர்புடையது என்பது எனக்குத் தெரியாது.

"நான் இங்கு வந்தபோது, ​​சில இளைஞர்களுடன் ஒரு சிறிய அறையில் வசித்தேன். எங்கள் அறையில் குளிப்பதற்கு வசதி இல்லாததால் நாங்கள் பொது குளியலறைக்கு சென்று குளிப்போம். எங்களைப் போன்ற பலர் பொதுக் குளியலறையில் குளிக்க வருவார்கள்,"என்று. நான்கு தசாப்தங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து சப்பானுக்கு சென்ற பிரவீன் காந்தி குறிப்பிட்டார்.

உடுப்பு ஏதும் இன்றி  குளிக்கச் சொன்னார்கள்

"நான் முழுவதும் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என்று கூறப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன், அது எனக்கு அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை.இந்தியாவில் சூழ்நிலை வேறு. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது ட்யூப் வெல் மற்றும் குளங்களில் இவ்வாறு குளிப்பது வழக்கம்,"என்று பிரவீன் கூறுகிறார்.

நிர்வாண ஒலிம்பிக் போட்டிகள் எப்போது, எங்கே நடந்தன தெரியுமா?

உலகின் கவனத்தை ஈர்த்த டோக்யோ ஒலிம்பிக் பதக்கத்தின் கதை

பிரவீன் காந்தி 1974 இல் அம்பாலாவில் இருந்து டோக்கியோவை அடைந்து ஒரு ட்ராவல் கம்பெனியை துவக்கினார்.

பிரவீன் காந்தி

"இது எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது, என்னால் அடிக்கடி இப்படி குளிக்க முடியவில்லை. அவர்கள் என்னை ஒரு வெளிமனிதராகப் பார்த்தனர். முற்றிலும் நிர்வாணமாக குளிக்க எனக்கு ஆறு மாதங்கள் ஆனது. அதன் பிறகு எல்லாமே மாறிவிட்டது.. இப்போது நான் அவர்களில் ஒருவனாக மாறிவிட்டேன். "என்கிறார் பிரவீன்.

"உங்களுக்கே தெரியும், நாம் இந்தியர்கள் அனைவருமே பொதுவாக கூச்ச சுபாவமுள்ளவர்கள். வெளிநாட்டு சப்பானியர்களுக்கு முன்னால் உடைகளை களைவது பெரும் சங்கடமாக இருந்தது,"என்று டோக்கியோவில் உள்ள மற்றொரு இந்தியரான சத்னாம் சிங் சன்னி குறிப்பிட்டார்.

சத்னம் சிங் ,1973 ஆம் ஆண்டில் அம்ரித்சரில் இருந்து சப்பானுக்கு சென்றார். அங்கு அவர் இந்திய உணவகத்தை தொடங்கினார். அதை அவர் சமீபத்தில் விற்றுவிட்டார்.

சப்பானின் மக்கள் தொகை 12.6 கோடி.அதில் 38,000 பேர் இந்தியர்கள். புள்ளிவிவரங்களின்படி, இந்த எண்ணிக்கை அவ்வளவு பெரியது அல்ல.

குடியேற்றம் மிகவும் எளிதானது அல்ல என்பதே இதற்குக் காரணம் என்று சப்பானில் வாழும் இந்தியர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இப்போது சப்பானில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பல இளைஞர்கள் வேலைக்கு வருகிறார்கள்.

சத்னாம் சிங்

சப்பானியர்களின் நட்பு மனப்பான்மை

சப்பானின் தலைநகர் டோக்கியோவில் பல தசாப்தங்களாக வாழும் பல இந்தியர்களுடன் நான் பேசினேன். தாங்கள் சப்பானில் குடியேற முடிவு செய்ததில் மகிழ்ச்சி அடைவதாக அவர்கள் தெரிவித்தனர்..

இருப்பினும், அந்த காலகட்டத்தில் தாங்கள் எதிர்கொண்ட சவால்கள் பற்றியும் அவர்கள் கூறினார்கள். சப்பானிய மக்களின் நட்புணர்வே, தாங்கள் இங்கு குடியேற முடிந்ததற்கு மிகப்பெரிய காரணம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

உய்வல் சிங் சாஹ்னி 54 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இருந்து வந்து சப்பானில் குடியேறினார். சப்பானிய அகராதியில் மற்ற மொழிகளைப் போல அவதூறுச்சொற்கள் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"அவர்கள் அமைதியை விரும்பும் மக்கள், இங்கு குற்ற விகிதம் மிகவும் குறைவாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். இரவு இரண்டு மணிக்கு எந்தப் பயமும் இல்லாமல் ஒரு பெண் இங்கு நடந்துசெல்வதை பார்க்கமுடியும்," என்று கைதராபாத்தைச் சேர்ந்த வி.பி. ரூபானி சுட்டிக்காட்டினார்.

சப்பானிய மக்கள் இயற்கையாகவே மிகவும் உதவிகுணம் கொண்டவர்கள். உங்களுக்கு இரவு இரண்டு மணிக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 18 வயது பெண் கூட உங்களின் உதவிக்கு வந்துவிடுவார் என்று சத்னாம் சிங் சன்னி விளக்குகிறார்.

உய்வால் சிங்

தங்கள் நாட்டிற்காக எதையும் செய்யக்கூடிய அளவிற்கு சப்பான் மக்களின் தேசபக்தி உயர்வானது என்று அவர் கூறுகிறார்.

உணவகங்களில் ,விடுதிகளில் ஊழியர்கள் எந்த நன்கொடையும்( 'டிப்பும்') பெறுவதில்லை

"பேரழிவுகரமான 2011ஆழிப்பேரலையை( சுனாமி,) ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றது மற்றும் அதிக சேதத்தை ஏற்படுத்தியது, சப்பானிய தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் அதிக வேலை செய்யத் தயாராக இருந்தனர். இது சப்பானை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான கரு என அவர்கள் சொல்வார்கள்,"என்று சத்னாம் சிங் குறிப்பிட்டார்.

சப்பான் மக்களைப் பற்றி இன்னொரு சுவையான கருவை அவர் தெரிவித்தார். "இங்கே உணவக,விடுதி ஊழியர்கள் தங்கள் விருந்தினரிடமிருந்து எந்த நன்கொடைகளும்  டிப்பும் பெற்றுக்கொள்ளமாட்டார்கள். இது எங்கள் வேலை, எனவே டிப் வேண்டாம் என்று அவர்கள் பணிவுடன் சொல்கிறார்கள்,"என்கிறார் அவர்.

தாங்கள் சப்பானிய மொழியைக் கற்க வேண்டியிருந்தது என்பதை எல்லா இந்தியர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

"நாங்கள் இங்கு வந்து குடியேறியுள்ளோம். அவர்களுடன் பேசாதவரை, அவர்களை புரிந்துகொள்ளாதவரை நாம் எப்படி இங்கு வாழ அல்லது அவர்களுடன் வேலை செய்ய முடியும். இதற்காக நாங்கள் சப்பானிய மொழியைக் கற்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்டோம்."என்று உய்வல் சிங் சாகனி கூறினார்.

ஆனால் சப்பானிய மொழியைக் கற்றுக்கொள்வது எவ்வளவு கடினமாக இருந்தது என்று வினவியபோது, "சுமார் ஆறு மாதங்கள் பிடித்தது" என்று அவர் தெரிவித்தார்.

கர்தீப் சிங் ரத்தன் ஒரு வங்கியாளர். அவர் டோக்கியோவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. இங்கு வாழ்வதற்கு அதிக செலவாகிறது என்றும் மொழிப் பிரச்சனையும் இருக்கிறது என்றும் அவர் சொன்னார்.

"நீங்கள் சப்பானிய மொழியை நன்கு அறிந்திருக்க வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம்."என்கிறார் அவர்.