குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

பூநகரி பகுதியிலுள்ள கடல் அட்டைப்பண்ணையை அகற்ற அரசுக்கு 2 வார காலக்கெடு!

14.07.2021 .....பூநகரி பகுதியிலுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து, சட்டவிரோதமான கடலட்டைப் பண்ணை களை அமைப்போம் என்று வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாயிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார். “ பூநகரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை இன்னும் அகற்றப்படவில்லை எனவும் ஆகவே, இன்றிலிருந்து இன்னும் 2 வாரங்களுக்குள் அந்தப் பண்ணையை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தவறினால், தாங்களும் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் சட்டவிரோதமான பண்ணைகளை நிறுவுவோமெனவும் எச்சரித்தார்.

“அதன் பின்னர் வரும் விளைவுகளை சந்திக்கவும் நாம் தயாராக இருக்கின்றோம். மேலும் சீனா இதனூடாக கடலை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது என்பதனை இந்தியா உள்ளிட்ட நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் சிவாயிலிங்கம் கூறினார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.