குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

நம் ஆதிச்சநல்லூர் 3000 ஆண்டுகள் பழமையானது: ஒத்துக்கொண்டது நம் இந்திய அரசு.!

21.04.2021.....உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும்  தாய் எம் தமிழ் தாய்......!

ஆதிச்சநல்லூர் அகழாய்வு மாதிரி பொருட்களின் கார்பன் பரிசோதனையில் ஒரு பொருளின் வயது கிமு.905 மற்றொன்றின் வயது கிமு.791 என தெரியவந்துள்ளது என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல்.செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர்  முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடம். ஆதிச்சநல்லூரில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில்  பாண்டிய நாட்டின் தலைநகரான  கொற்கை, அமைந்திருந்துள்ளது. இங்கு அழகாய்வு பணி 2004 பிப்ரவரியில் தொடங்கப்பட்டன.

இந்த ஆய்வில் ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் ஏராளமான பழங்கால பொருட்களும் கண்டெடுக்கப்பட்டது.

இதுவரை ஆதிச்சநல்லூரில்  4 கட்ட அகழாய்வு நடைபெற்றுள்ள நிலையில் அகழாய்வு குறித்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், இங்கு எடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் சென்னையிலும், வெளிநாடுகளிலும் வைக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்கால பொருட்களை காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

இதே போல தூத்துக்குடி சிவகளை, பரம்பு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தக்கோரியும் காமராஜர் தனி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு  அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் கார்பன் பரிசோதனைக்கும் மாதிரி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று வழக்கு நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அமெரிக்காவிற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட 2 பொருட்கள் குறித்த முடிவுகளை, மத்திய அரசு இன்றைய விசாரணையின்போது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன்படி, அகழாய்வில் கிடைக்கப்பெற்ற ஒரு பொருளின் வயது கிமு 905 என்பதும், மற்றொன்றின் வயது கிமு 791 என்பதும், தெரிய வந்துள்ளது.  அதேபோல் சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள், கி.மு. 395 ஆண்டை சேர்ந்தவை எனவும், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல்களை குறித்துக்கொண்ட நீதிபதிகள்,

இதையடுத்து நீதிபதிகள், தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி என தெரிய வருகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து,  கார்பன் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா? அல்லது மாநில அரசு மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுமா? என்பது குறித்து மத்திய தொல்லியல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 11 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.