குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பூமியின் ஆழமான பகுதியில் என்ன இருக்கிறது? இதுவரை பயணம் செய்த 3 பேர் என்ன ஆனார்கள்?

08.01.2020......மீண்டும் 26.01.2021.... மனிதன் வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இருக்குமா? அதற்கான சாத்தியம் இருக்குமா? அல்லது அடையாளம் எதுவும் கிடைக்குமா? என்று விண்வெளியில் பலகட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறான். ஆனால், இந்த தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திலும், மனிதனால் ஆராய்ந்து பார்க்க முடியாத ஒரு இடம் பூமியிலேயே உள்ளது என்றால் அது நிச்சயம் ஆழ்கடலில் அமைத்திருக்கும் மரியானா அகழியாக மட்டுமே இருக்கக் கூடும். மரியானா அகழி எங்கு அமைத்துள்ளது?

கவாய் மற்றும் பிலிப்பைன்சு இடையே குவாம் என்ற சிறிய தீவுக்கு அருகில், நீரின் மேற்பரப்பிற்கு மிகக் கீழே, மரியானா அகழி அமர்ந்திருக்கிறது. மரியானா அகழி தான் பூமியில் அமைந்துள்ள கடலின் மிகவும் ஆழமான பகுதி, இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கவே முடியாத பல மர்மங்கள் இந்த ஆழ்கடல் அகழியில் தான் ஒளிந்துள்ளது. உலகின் மிக ஆழமான மரியானா அகழியின் கீழே என்ன இருக்கிறது? இதுவரை என்ன கண்டுபிடித்துள்ளனர் என்று பார்க்கலாம். பூமியில் மனிதனின் காலடி படாத ஒரே இடம் இன்றைய நாள் வரை மனிதனின் காலடி படாத ஒரே இடம் ஆழ்கடலாக மட்டும் தான் இருக்கக்கூடும், ஏன் வரும்காலங்களில் கூட இதற்கான சாத்தியம் வெறும் 0.01 சதவீதம் தான் என்றே கூற வேண்டும். மனிதனின் காலடி பட வாய்ப்பே இல்லாத இடத்தை பற்றி இதுவரை நமக்குத் தெரிந்து வியக்கத்தக்க உண்மைகள் என்னவென்றால், இந்த ஆழ்கடல் அகழியில் பல மர்மங்கள் ஒளிந்திருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அரிதான பல கடல் வாழ் உயிரினங்கள் வாழும் இடம்

கண்களுக்கு முழுமையாகத் தென்படாத, பல எண்ணிலடங்கா இரகசியங்களை இந்த அகழி மறைத்து வருகிறது என்கின்றனர். இருப்பது போலவே கடலின் அடியிலும் எரிமலைகள், சிறு குன்றுகள், பள்ளத்தாக்குகள், மாபெரும் மலைத்தொடர்கள் என்று அனைத்தும் இருக்கின்றது. மனிதன் இன்னும் கண்டுபிடிக்காத பல கடல் வாழ் உயிரினங்கள் இந்த கடலில் வாழ்கின்றன. இன்னும் பல மர்மங்கள் இந்த பகுதியில் மறைந்து இருக்கிறது என்பது தான் உண்மை. ஆழ்கடலை முழுமையாக ஆராய முடியாமல் போனதற்கு இது தான் காரணம் பூமியில் ஆழ்கடலை இன்னும் மனிதன் முழுமையாக ஆராய்ச்சி செய்யாததற்கு முக்கியக் காரணம், கடலின் அழுத்தம் தான். ஆழ்கடலுக்குள் நாம் கீழே செல்லச் செல்ல நீரின் எடை அதிகரித்து, இதனால் நீரின் அழுத்தம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அதிகரிக்கிறது.

இயல்பான கடல் அழுத்தத்தைப் போல் இல்லாமல், மரியானா அகழியின் கடல் நீர் அழுத்தம் 1000 மடங்கிற்கு அதிகமானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆழ்கடலில் உள்ள இரண்டு பெரிய பிரச்சனைகள் ஆழ்கடலில் உள்ள அழுத்தம் ஒரு பெரிய பிரச்சனை என்றால், மரியானா அகழியில் இன்னுமொரு பிரச்சனையும் இருக்கிறது, அது தான் வெளிச்சம். ஆழ்கடலின் காலத்திற்குச் செல்லச் செல்ல சூரிய ஒளியானது மறைய துவங்கிவிடும். இதனால் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பிறகு ஆழ்கடலில் கும்மிருட்டு தான் நிகழும். சூரிய ஒளியானது சுமார் இருநூறு மீட்டர் ஆழம் வரை மட்டுமே ஊடுருவும். அடுத்த ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஓரளவு வெளிச்சம் இருக்கும். எங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை! எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க! நீர்மூழ்கிக் கப்பல் கூட இங்கு வெடித்து சிதறிவிடும் சுவாசக் கருவியின் உதவியோடு மனிதன் ஆயிரம் அடி வரை மட்டுமே பயணிக்க முடியும். மனிதனால், நீண்ட நேரம் கடலின் ஆழத்தில் இருக்க இயலாது, ஆழ்கடல் அழுத்தத்தினால் மனிதனின் உடலில் சில உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீர்மூழ்கிக் கப்பல்கள் கூட ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு மேல் பயணிக்காது. ஏனெனில், கடல் நீரின் அழுத்தத்தால் நீர்மூழ்கிக் கப்பலும் வெடித்துச் சிதற வாய்ப்புள்ளது.

இதனால் தான் மனிதன் இன்னும் ஆழ்கடலை முழுமையாக ஆராய்ந்து முடிக்க முடியவில்லை. மரியானா அகழியில் அமைந்துள்ள 'சேலஞ்சர் மடு' என்ற பள்ளம் தான். பசிபிக் கடலில் உள்ள மிகவும் ஆழமான பகுதி, இந்த பகுதியை 'மரியானா நீள்வரிப்பள்ளம்' என்றும் அழைக்கின்றனர். இது சுமார் 2550 கிலோ மீட்டர் நீளமும், 69 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இதன் ஆழம் கிட்டத்தட்ட 7 மைல் ஆகும். அதாவது சரியாகச் சொன்னால் 36,201 அடி, கிட்டத்தட்ட இமயமலை விட பெரியதாம். இந்த படுகுழியில் இமயமலையை மூழ்கடித்துவிடலாம் என்றுதேசிய நேசனல் யோகிராஃபிக் கூறியுள்ளது. எவரெசுட் சிகரத்தையே விழுங்கிவிடும் மரியானா அகழி! நேஷனல் யோகிராஃபிக்கின் கூற்றுப்படி, இமயமலை(எவரெசுட்) சிகரத்தை மரியானா அகழியின் அடிப்பகுதியில் வைத்தால், அதன் உச்சம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,000 அடி கீழே அமர்ந்திருக்கும் என்றால், இதன் ஆழத்தை நீங்களே புரிந்துகொள்ளுங்கள். இப்படி நம்பமுடியாத பூமியின் மிக ஆபத்தான பகுதியை இதுவரை 3 டைவர்சு மட்டுமே ஆராய்ந்துள்ளனர் என்றால் நம்புவீர்களா? நம்புங்கள் இந்த 3 நபர்கள் மட்டுமே இந்த அகழியின் பெரும் ஆழத்தை ஆராய்ந்துள்ளனர்.

மரியானா அகழி ஆழத்தை ஆராய முதல் பயணம்

யாக்சு பிக்கார்ட் மற்றும் கடற்படை லெப்டினன்ட் டான் வால்ச் ஆகியோர், 1960 ஆம் ஆண்டில் அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி உதவியுடன் சேலஞ்சர் ஆழத்தை ஆராய்ந்துள்ளனர். மரியானா அகழி ஆழத்தை ஆராய மேற்கொள்ளப்பட்ட முதல் பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான அழுத்தத்தினால் அவர்களால் 20 நிமிடங்கள் மட்டுமே ஆழ்கடலில் செலவிட முடிந்துள்ளது. அதற்குப் பின் 50 ஆண்டுகளாக யாரும் இந்த விபரீத முயற்சியை மேற்கொள்ளவில்லை, ஒருவரைத் தவிர. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவதாக பயணம் செய்தவர் யார் தெரியுமா?

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, 2012 ஆம் ஆண்டில் திரைப்படத் தயாரிப்பாளரும், அறிவியல் புனைகதை ஆர்வலருமான யேம்சு கேமரூன் மரியானா அகழியை நோக்கி தான் உருவாக்கி வடிவமைத்த நீர்மூழ்கி கப்பலில் சேலஞ்சர் டீப்பிற்கு டைவ் செய்தார். கேமரூன் வடிவமைத்து உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பலின் உதவியுடன் அவரால் அங்கு சுமார் மூன்று மணி நேரம் செலவிட முடிந்தது என்பது குறிப்பிடத்தது. இந்த பயணத்தின் போது பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் பதிவு செய்துள்ளார்.

மனிதனின் கரங்களுக்கு இன்னும் எட்டாத மர்மம்

குறிப்பிட்ட ஒரு ஆழத்திற்குப் பின்பு, அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட அவரின் நீர்மூழ்கி நீரின் அழுத்தம் தாங்காமல் உபகரணங்கள் பாதிப்படையத் துவங்கியுள்ளது. பேட்டரி மற்றும் சோனார் கருவிகள் செயல் இழந்துவிட்டது மற்றும் அவரது கப்பலின் சில உந்துதல்கள் சரியாகச் செயல்படவில்லை, இதனால் பயணத்தைத் தொடரமுடியாமல் யேம்சு கேமரூன் கடலின் மேற்பரப்புக்கு வந்துவிட்டார். இன்னும் பூமியின் ஆழ்கடல், மனிதனின் கரங்களுக்கு எட்டாத மர்மமாகவே இருக்கிறது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.