ஆதி மனிதனே நல்மாந்தன்!
இன்றைய மனிதனோவேடன்!!
அன்று அவன் மானத்திற்காய் தரித்தான்
இன்று இவனோ வேடத்திற்காய் அணிகின்றான்.
அன்றோ உணவுக்காய் மட்டுமே உயிர்களைக்கொன்றான்
இன்றோ பணத்திற்காய் உலகையே அழிக்கின்றான்.
பன்றிகளை மாடுகளை
கோழிகளை வளர்ப்பதுபோல்
உலகமக்களை வளர்த்து
தம்பணத்திற்காய் பலியிடுகின்றான்
வல்லரசு தாம் என்கின்றான்
வளர்ந்தநாடுகளாம் தாமென்கின்றான்
மற்றவை எல்லாம் இவனுக்கு
பண்ணை விலங்ககள் என்றே எண்ணுகின்றான்.
இரண்டாயிரத்தி இருபது வந்தது
இவனையும் பதறவைத்தது!
தீயநுண்ணி பெருகியது
வல்லரசு நாடுகளையே நடுங்கவைத்தது!!
வேகமாய் ஒராண்டுக்குள் தடுப்பூசிமருந்து என்றான்!!!
தடுப்பூசிபோடமுனே மிடுக்குடன்
வேறொருதீயநுண்ணி விழிபிதுங்கிநிற்கின்றான்.
மாந்தனின் அறந்தான் மருந்தாகும் என்பதை
பணந்தான் உலகமென்றலையும் மனிதன்
உணரும்வரை தடுப்புசியேதும் வராது
உண்மைய உணர்தலே மருந்தாகும்.
பூநகரி ஆசிரியர் பொன்னம்பலம் முருகவேள் சுவிற்சர்லாந்து 28.12.2020