குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

முறைகேடாக அறிவாலய நிலம் வாங்குவதை எம் யி ஆர் எதிர்த்ததால்தான் நீக்கினார் கருணாநிதி-யெயலலிதா

 14.10.2011-அண்ணா அறிவாலயத்திற்கு நிலம் வாங்குவது தொடர்பான பத்திரத்தில் கருணாநிதியின் பெயர் மட்டுமே இருக்கிறது. அறக்கட்டளைக்கு இடம் வாங்கும் போது எம் யி ஆர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இப்படி பல அத்துமீறல்களை கருணாநிதி செய்து ஏமாற்றுவதை எதிர்த்ததால்தான் 1972 அக்டோபர் 9ந் தேதி எம் யி ஆரை கருணாநிதி கட்சியை விட்டு நீக்கினார். அக்டோபர் 17ந் தேதி எம்யிஆர் அண்ணா திமுக எனும் புதிய கட்சியை தொடங்கினார். இந்த நில விவகாரத்தில் நீதிமன்றத்தை சந்திக்க முடியாத கருணாநிதி எனக்கு சவால் விடுவது வேடிக்கையாக உள்ளது என்று கூறியுள்ளார் முதல்வர் யெயலலிதா.

தமிழகத்தில் வரும் 17, 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான யெயலலிதா இன்று தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பிரசாரம் செய்தார்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இன்று (13-ம் தேதி) காலை தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அங்கிருந்து கெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி-எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள யோதிநகர் கெலிபேட் தளத்தில் இறங்கினார். பின்னர் கார் மூலம் தூத்துக்குடி அண்ணா நகர் சென்றார். தூத்துக்குடி மேயர் வேட்பாளர் சசிகலா புஷ்பா, 60 வார்டுகளின் கவுன்சிலர் மற்றும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து யெயலலிதா பிரசாரம் செய்து பேசினார்.

அப்போது யெயலலிதா பேசுகையில்,

ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, உங்களை எல்லாம் சந்தித்து அஇஅதிமு கழகத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டேன். எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று, குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்தீர்கள். இதனையடுத்து தமிழகத்தில் மக்களாட்சி மலர்ந்தது. உங்களின் அமோக ஆதரவுடன் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன். இதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை மீண்டும் ஒரு முறை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களில் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் நிறைவேற்றி இருக்கிறேன். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அனைவருக்கும் விலையில்லா அரிசி வழங்கினோம், முதியோர், விதவையர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை, 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தினோம்;

மகளிர் நலன் காக்கும் வகையில் திருமண உதவித் திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு 25,000/- ரூபாய் உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம் வழங்கினோம்; பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்திருக்கும் பெண்களுக்கு 50,000/- ரூபாய் என உயர்த்தப்பட்ட உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம் வழங்கினோம்; திருமணமானவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கினோம்;

பெண் அரசு ஊழியர்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க 6 மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கினோம். இந்தத் திட்டங்களின் பயனை நீங்கள் எல்லாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இது மட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க "சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை" என்று ஒரு தனித் துறையினையும் ஏற்படுத்தி இருக்கிறேன்.

இவை மட்டுமன்றி, தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம்; +1, +2 மற்றும் கல்லூரி படிப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு மடிக் கணினி வழங்கும் திட்டம்; ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம்; இடை நிற்றலை குறைக்கும் பொருட்டு 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம்; மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. இணைப்பு வழங்கும் திட்டம் ஆகியவற்றையும் துவக்கி வைத்துள்ளேன்.

சமூக நீதியை காக்கும் வகையில், வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து கடைபிடிக்க ஆணையிட்டுள்ளேன்.

இலங்கை இனப் படுகொலையில் ஈடுபட்டவர்கள் போர்க் குற்றவாளிகளாக, அறிவிக்கப்பட வேண்டும் என்றும்; இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானங்களை இயற்றி இருக்கிறோம்.

சட்டம் - ஒழுங்கைப் பொறுத்த வரையில், கடந்த திமுக ஆட்சியில் ரவுடிகளின் நண்பனாக விளங்கிய காவல் துறை தற்போது பொதுமக்களின் நண்பனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனது அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக அமளிக் காடாக விளங்கிய தமிழகம் நான்கே மாதங்களில் அமைதிப் பூங்காவாக மாறி இருக்கிறது. உங்களின் சொத்துக்கள் எல்லாம் எப்போது தி.மு.க-வினரால் பறிக்கப்படுமோ என்று இருந்த நிலை மாறி நீங்கள் எல்லாம் தற்போது நிம்மதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அடுத்தவர்களின் சொத்துக்களை அபகரிப்பது கருணாநிதிக்கு கைவந்த கலை.

அண்மையில் நான், திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது, சென்னையில் தி.மு.க. தலைமையகம் அமைந்துள்ள இடத்தை கருணாநிதி எப்படி மிரட்டி வாங்கினார் என்பது குறித்து எடுத்துரைத்தேன்.

இதற்கு பதில் அளித்த கருணாநிதி, அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடத்தின் மொத்த பரப்பளவு 25 கிரவுண்ட் தான் என்று கூறி இருக்கிறார். இது முற்றிலும் பொய்யான தகவல். உண்மை நிலை என்னவென்றால், இந்த இடத்தின் மொத்த பரப்பு, 4 ஏக்கர். அதாவது, கிட்டத்தட்ட 90 கிரவுண்ட் ஆகும். 25 கிரவுண்ட் என்பது உண்மையானால் மீதமுள்ள இடத்தை அரசாங்கத்திற்கு கொடுக்க கருணாநிதி தயாரா?

இந்த இடத்தின் அன்றைய மதிப்பு 18 லட்சம் ரூபாய். ஆனால், இந்த இடத்தை 9 லட்சம் ரூபாய்க்கு விற்குமாறு கருணாநிதி கட்டாயப்படுத்தியதாக திரு. ஞ. சுப்புரத்தினம் சர்க்காரியா கமிஷன் முன்பு தெரிவித்து இருக்கிறார். இது குறித்து கருணாநிதி ஏன் வாய் திறக்கவில்லை?

இந்த இடத்தை தி.மு.க-விற்கு விற்கவில்லை என்றால், அரசு தேவைக்காக எடுத்துக் கொள்வோம்; அதற்கான இழப்பீடு மிகவும் குறைவாக இருக்கும் என்று கருணாநிதி எச்சரித்ததாக திரு. ஞ. சுப்புரத்தினம் தெரிவித்து இருக்கிறார். இது பற்றி கருணாநிதி ஏன் வாய் திறக்கவில்லை?

சொத்து வரி கட்ட வேண்டும் என்று அரசு சார்பில் நில உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை வசூல் செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதே, அதை வைத்து மிரட்டி நிலத்தை வாங்குவதற்காகத் தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேற்படி சொத்து தி.மு.க. அறக்கட்டளைக்கு மாற்றப்பட்ட பின்பு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி 60,123 ரூபாய் வரி கட்டுவதில் இருந்து விலக்கு பெற்றிருக்கிறார் கருணாநிதி. அதாவது அரசாங்கத்திற்கு வரி இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

""ஏழை மக்களின் நலன்களை மேம்படுத்துவது தி.மு.க. அறக்கட்டளையின் நோக்கம்"" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அண்ணா அறிவாலயம் இடம் வாங்கியது குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், """"கட்சியின் சொத்துக்களை பாதுகாப்பாக வைப்பதற்காக"" வாங்கியதாக கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆனால், சர்க்காரியா விசாரணை ஆணையம் முன்பு தர்ம காரியங்களுக்காக அறக்கட்டளை துவக்கப்பட்டதாக மனு தாக்கல் செய்திருக்கிறார். அதாவது, மாறி மாறி பேசி இருக்கிறார். இது, கருணாநிதியின் நிலையற்ற தன்மையை எடுத்துக் காட்டுகிறது.

செங்கல்பட்டு நீதிமன்ற தீர்ப்பின்படி, 18 பேர் பெண்ணலூர்பேட்டை ஜமீன் சொத்துக்களின் உரிமையாளர்கள். ஆனால், 10 பேர் கையெழுத்து போட்டு இருப்பதாக கருணாநிதி கூறுகிறார். இந்த 10 பேரில் பெரும்பாலானவர்களின் கையெழுத்துகள் கேள்விக்குறியானவை.

தி.மு.க. அறக்கட்டளையில் புரட்சித் தலைவர் எம்.ஜிஆர் அவர்களும் ஓர் உறுப்பினராக இருந்தார் என்று கூறி இருக்கிறார் கருணாநிதி. உண்மை என்னவென்றால், மேற்படி இடத்திற்கான பத்திரத்தில் கருணாநிதியின் பெயர் மட்டும் தான் இடம் பெற்றிருக்கிறது. தி.மு.க. அறக்கட்டளையில் புரட்சித் தலைவர் அப்போது இருந்திருந்தாலும் அவர் மேற்படி இடத்தை மிரட்டி வாங்கியதற்கு தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கிறார்.

கருணாநிதியின் இது போன்ற பல அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், 9, அக்டோபர் 1972 அன்று புரட்சித் தலைவர் அவர்களை கட்சியில் இருந்தே நீக்கிவிட்டார் கருணாநிதி. இந்த தீய சக்தியை எதிர்த்து தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மக்கள் இயக்கத்தை 17.10.1972 அன்று ஆரம்பித்தார் நமது இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். 18.10.1972 அன்று தி.மு.க. அறக்கட்டளையில் இருந்து புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது.

இந்த வழக்குகளை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திக்க திராணியில்லாத கருணாநிதி எனக்கு சவால் விடுவது கேலிக் கூத்தாக இருக்கிறது. தான் ஒரு உலக மகா """"பொய்யர்"" என்பதை கருணாநிதி மீண்டும் நிரூபித்து இருக்கிறார். இது போன்ற நில அபகரிப்புகள் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அதிக அளவில் நடைபெற்றன.

இதனை அறிந்த நான், முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு மீண்டும் அவற்றின் உரிமையாளர்களுக்கே திரும்பத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின் போது உங்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தேன்.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, மாநிலம் முழுவதும் நிலம் மற்றும் சொத்து அபகரிப்பு புகார்களை காவல் துறையினர் திறம்பட கவனிக்கும் வகையில் அனைத்து காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரிவுகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது வழக்குகளை பதிவு செய்து, அபகரிக்கப்பட்ட சொத்துக்களை உரியவர்களிடம் வழங்கிட சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த வழக்குகளை விசாரிப்பதற்கென 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து இன்று வரை 17,431 புகார்கள் பெறப்பட்டு உள்ளன. 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றுள் 28 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. 755 நில ஆக்கிரமிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

625 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அபகரிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் உரியவர்களிடம் சட்டப்படி ஒப்படைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்ற உத்தரவாதத்தை இந்த நேரத்தில் உங்களுக்கு நான் அளிக்க விரும்புகிறேன்.

முந்தைய தி.மு.க. ஆட்சியில் மின்சார உற்பத்தியில் மின் குறை மாநிலமாக தமிழகம் விளங்கியது. நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மின் உற்பத்தியைப் பெருக்கவும், மின்வெட்டைப் போக்கவும் போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளேன். தமிழ்நாட்டில் தற்போது மின் வெட்டு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. அடுத்த ஆண்டிற்குள் தமிழ்நாட்டை மின்வெட்டே இல்லாத மாநிலமாக நிச்சயம் ஆக்குவேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள் எடுத்துள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக அனைத்துத் துறைகளும், முன்னேற்றப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு ஒரு சுபிட்சமான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் இம்மாதம் 17 மற்றும் 19 தேதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி, தெரு விளக்கு வசதி ஆகிய அடிப்படைத் தேவைகளை செய்து தருவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க-வினரே இருந்தனர். அனைத்துத் திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடியது. இவர்கள் உங்களை முன்னேற்றம் அடையச் செய்வதற்குப் பதிலாக தங்களை முன்னேற்றிக் கொண்டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக-வின் வசம் தான் இருந்து வந்தது. ஆனால், அவர்கள் உங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என்பது தான் உண்மை. கவுன்சிலர்கள் என்றாலே உங்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வு தான் இருந்தது. அந்த அளவிற்கு திமுக-வினர் வெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டனர். உங்களை மிரட்டி உங்கள் சொத்துக்களை அபகரித்து திமுக-வினர் வாழ்ந்து வந்தார்கள். மொத்தத்தில், நீங்களும் வளர்ச்சி அடையவில்லை; இந்தத் தூத்துக்குடி மாநகராட்சியும் வளர்ச்சி அடையவில்லை.

அஇஅதிமு கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உங்களுடனேயே இருந்து, உங்களின் குறைகளை தீர்ப்பவர்களாக; உங்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களாக விளங்குவார்கள்; உங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதியை உங்களுக்கு நான் அளிக்கிறேன்.உங்களின் முக்கிய கோரிக்கைகளான, தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகள் உட்பட அனைத்துப் பகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நான்காவது குடிநீர்த் திட்டம்;

ஒருங்கிணைந்த மாநகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம்; 1 மற்றும் 2-ஆம் ரயில்வே கேட் அருகில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம்;

நான்காவது ரயில்வே கேட் அருகில் மேம்பாலம் அமைக்கும் திட்டம்; புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்துதல்;

தூத்துக்குடி - பாளையங்கோட்டை பிரதான சாலையில் ஏஏனு சிக்னல் பகுதியில், மேம்பாலம் அமைக்கும் திட்டம்; புதிதாக தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் தார் சாலை, தெரு விளக்குகள், கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கும் திட்டம்; ஆகியவை நிச்சயம் நிறைவேற்றி தரப்படும்.

மொத்தத்தில், ஒரு நேர்மையான, திறமையான, தூய்மையான, ஒளிவு மறைவற்ற, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு நிர்வாகம் செயல்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் நலனுக்கு எதிராக நடந்து கொண்ட தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளை தூக்கி எறிவதற்கான நல்ல சந்தர்ப்பம் உங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுச் சாதனையை போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் மீண்டும் ஒரு திருப்பு முனையை நீங்கள் உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதை நிச்சயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையினை தெரிவித்து விடை பெறுகிறேன் என்றார் யெயலலிதா.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.