23.06.2020....அன்பார்ந்த தமிழ் மக்களே யாழில் சில கட்சிகள் இளஞர்களை மோதவிட்டு அவர்கள் அரசியலில் ஈடுபடமுடியாத சூழலை உருவாக்கி வருகின்றார்கள். இதனால் பெற்றோர்கள் இளையவர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவிடாது தடுத்து வருககின்றார்கள். சில கிராமங்களில் கட்சிரீதியான மோதல்களை உருவாக்கி அதனை சாதிப்பிரச்சனைகளாக மாத்தியுள்ளார்கள்.
இதனைக் கட்சிப்பிரச்சினையாகப் பார்க்கவும் மிகவிருப்புடன் அரசியலில் ஈடுபட்டுவந்த இளையவர்களை பெற்றோர்கள் அறையில் பூட்டிவைக்கும் நிலை தோன்றியுள்ளது. இதனைக்கருத்தில்கொண்டு இளைஞர்கள் விழிப்பாகவும் புத்திக்கூர்மையடனும் செயற்பாடு மடாறு கேட்டுக்கொள்கின்றோம். தென்பகுதிக்கட்சிகளின் செயற்பாட்டாளர்களால் இம்நிலை ஊக்கிவிக்கப்படுவதாக மக்கள் பேசிக்கொள்கின்றார்கள்.
கட்சிகளுக்காக நட்புடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அரசியலில் ஈடுபடும்போது நாகரீகமாகச்செயற்படவேண்டும் இது எப்போதும் நன்று. தேர்தல் நிறைவடைந்ததும் அவரவர் சென்றுவிடுவார்கள் தேர்தல்காலப்பகைகள் வாழ்நாள் பகைகளாக வளரக்கூடாது.இதனைக்கருத்தில்கொண்டு இளையவர்களும் ,ஊர்மக்களும் உண்மைகளை உணரந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.