குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

‘ஏ’ வகை குருதி(இரத்தப்) பிரிவினருக்கு கூடுதலான கவனம் தேவை..!

19.06. 2020..... ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகளின் மரபணுக்களை ஒப்பிட்டு இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், யெர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை நடத்தி அதன் முடிவுகளை நியு இங்கிலாந்து மருத்துவ பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த ஆய்வுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளையும், நோய் பாதிப்பில்லாமல் ஆரோக்கிய வாழ்க்கை வாழ்கிற மற்றும் கொரோனாவின் லேசான அல்லது அறிகுறிகள் அற்றவர்கள் என பல்லாயிரகணக்கானோரை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்து இருக்கிறார்கள்.

இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள முக்கிய உண்மை, கொரோனா வைரசு(கொரோனா தீயநுண்மி) தொற்று ‘ஏ’ வகை குருதிப்(இரத்த) பிரிவை சேர்ந்தவர்களை அதிகளவில் தாக்கி இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் ‘ஓ’ வகை இரத்த பிரிவை கொண்டவர்களுக்கு மிக குறைவான எண்ணிக்கையிலானவர்களுக்குத்தான் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதுவும் அம்பலமாகியுள்ளது. இவை அனைத்தும்  சீனாவின் முந்தைய ஆய்வுகளை உறுதிப்படுத்துவதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி விசுகான்சின் மருத்துவ கல்லூரியின் குருதிநிபுணர் டாக்டர் பரமேச்வர் கரி கூறும்போது, “ முதலில் சீன ஆய்வு முடிவு பெரிய அளவில் அடிப்படை ஏதுமின்றி (கச்சா ஆய்வு) வந்தது. எனவே அதை நாங்கள் கணக்கில் கொள்ளவில்லை. ஆனால் இப்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வை நான் நம்புகிறேன். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையக்கூடும்” என்கிறார்.

அதே நேரத்தில் ஏனைய விஞ்ஞானிகள் எச்சரிக்கையுடன் இந்த ஆய்வு முடிவுகளை கவனிக்கின்றார்கள் என்பதையும் பதிவு செய்தாக வேண்டியதிருக்கிறது.

சாண்டீகோவிலுள்ள சுகிரிப்சு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எரிக் டோபோல், “இரத்த வகைக்கான பங்களிப்பு சான்றுகள் தற்காலிகமானது. ஒரு சமிக்ஞையை உறுதிப்படுத்த இது போதுமானதாக இல்லை” என்று கருத்து கூறுகிறார்.

அதே நேரத்தில் ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள், 6 மரபணுக்களில் உள்ள மாறுபாடுகளை கடுமையான நோய்க்கான சாத்தியக்கூறுகளுடன் பொருத்திப் பார்த்து இருக்கிறார்கள். கொரோனா வைரசு பாதிப்புக்கு ஆளாகக்கூடிய இரத்த வகைகளையும் பொருத்தி பார்த்துள்ளனர்.

“இது போன்ற பெரும்பாலான மரபணு ஆய்வுகள் மிகப்பெரியவை. எனவே மற்ற விஞ்ஞானிகள் இதேபோன்று இணைப்புகளை நோயாளிகளின் மற்ற குழுக்களிடம் பார்க்க முடியுமா என்பதையும் ஆராய வேண்டியதிருக்கிறது என்று டாக்டர் எரிக் டோபோல் கூறியுள்ளார்.

அதோடு, வயதானவர்கள் அல்லது ஆண்கள் அதிகமான பாதிப்புக்கு ஆளாகிறார்கள். எனவே வைரசின் தீவிர தன்மைக்கு காரணிகளை தேடி வருகிறார்கள்.

ஆனால் சர்வதேச இரத்தம் மற்றும் மய்யைமாற்று ஆராய்ச்சி மையத்தின் அறிவியல் தலைவர் டாக்டர் மேரி கோரோவிட்சு(ஸ்) கூறுவதுவும் கவனிக்கத்தக்கது. அவர், “ஏ, பி, ஏபி, ஓ என முக்கியமாக 4 வகை இரத்த பிரிவுகள் இருக்கின்றன. இது உங்கள் இரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் உள்ள புரதங்களால் நிர்ணயிக்கப்படுகிறது” என்கிறார்.

இது பற்றி விசுகான்சின் மருத்துவ கல்லூரியின் இரத்த நிபுணர் டாக்டர் பரமேச்வர் கரி சொல்லும்போது, “ஓ வகை இரத்த பிரிவு உடையவர்களுக்கு, சில புரதங்களை அயலானாக அடையாளம் காண முடிகிறது. இது வைரசு மேற்பரப்புகளில் உள்ள புரதங்களுக்கும் பொருந்தும்” என்கிறார்.

அது மட்டுமல்ல, கொரோனா வைரசின் உறவு வைரசால் சார்சு வைரசு தொற்று பரவியபோதும், ஓ வகை இரத்த பிரிவு உடையவர்களுக்கு குறைவான பாதிப்பை ஏற்பட்டதை காண முடிந்தது என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

சிறுநீர்பாதை நோய்த்தொற்றுகள் போன்றவற்றிலும்கூட இரத்த வகை தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததாக யான்சு காப்கின்சு பல்கலைக்கழகத்தின் மரபணு மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் டேவிட் வேலி குறிப்பிடுகிறார்.

அவர் தொடர்ந்து சொல்லும்போது, “ இது தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஆய்வு. இது வெளியிடுவதற்கும், வெளியே செல்வதற்கும் மதிப்பு வாய்ந்தது. அதே நேரத்தில் இன்னும் கூடுதலான நோயாளிகளின் தரவுகளை கொண்டு இது சரிபார்க்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த ஆய்வு முடிவு உணர்த்தும் உண்மை, கொரோனா தாக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வின் மூலம் விஞ்ஞானிகள் உணர்த்தியுள்ள நிலையில் ‘ஏ’  இரத்த வகை பிரிவினர் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. ‘ஓ’வகை இரத்த பிரிவினர் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம், ஆனாலும் அவர்களும் கவனமாக இருக்கத்தான் வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.