வட்டுவாய்கால் நீ அமைதியாய்
அழகாய் இருக்கின்றாய்!
நீ மறந்தாயோ!! நீ நினைவாய்
இருக்கி்ன்றாயோ?
ஆழ் மனது ஏதோ தேடுகிறது
மேல்மனது அமைதியாய் இருக்கிறது!
முள்ளிவாய்க்கால் நினைவுகள்
கொரோனா போல் தொண்டையில்
முட்டுகிறது நெஞ்சில்
உயிரைநெருடுகிறது.
உயிரிருந்தும் உயிரிழந்ததுபோல்
ஆண்டாண்டு ஆழிப்பேரலைகள்
வந்து மோதும் சில நிமிடங்கள்
மூச்சு அடக்கிப்போகும்.
மனமிழந்தோர் நினைவு இழப்பார் !
மாங்கொண்டோர் நினைவிழக்கார்!!
வனிப்பரணிக் காட்சிகள்
தரணியில் தமிழர் உள்ளவரை
கல்லில் எழுத்தாய்
என்றும் படிந்திருக்கும்.
எழுந்து நடக்க மனம் துடித்து
உலகிருந்து யெனீவாவில்(சுவிசில்)
பிழையாய் கூடிக்கலைகின்றோம்!
அரைகுறை நிலைகள் தான்
தொடர்கின்றது ஆண்டுகள்
பதினொன்று ஆகியும்
ஒன்றும் ஆனபடி முடியவில்லை!
அழிந்த முகங்கள்
ஏதோ தேடுகின்றது
இருக்கும் முகங்கள்
ஆண்டுக்கொருமுறை
விம்மி வெடித்து விட்டு
துடிப்பின்றி உலக மயமாக்கலில்
உழன்று சுழன்று வருகின்றது!
பூநகரி ஆசிரியர் பொன்னம்பலம் முருகவேள் சுவிற்சர்லாந்து...... 16.05.2020