551. |
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. |
552. |
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. |
553. |
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். |
554. |
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. |
555. |
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை |
556. |
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி. |
557. |
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. |
558. |
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். |
559. |
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். |
560. |
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். |