இதேவேளை, குருநாகல் நிக்கவரெட்டிய பகுதியில் நாடு திரும்பியுள்ள 212 பேர் இன்னும் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளவில்லை என்றும் நிக்கரவெட்டிய காவல்துறை தெரிவித்துள்ளது
இந்த நிலையில் மறைந்துள்ள அவர்கள் தொடர்பில் பொதுமக்கள் கிராம சேவகர்களுக்கோ அல்லது பொது சுகாதார அதிகாரிகளுக்கோ தகவல் தருமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
தீயநுண்மி கொரோனா வைரசு தடுப்பு மருந்து! பிரித்தானிய விஞ்ஞானிகள்!
தீயநுண்மித் தடுப்பு மருந்து! பிரித்தானிய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல்!
பிரித்தானிய விஞ்ஞானிகள் தீயநுண்மி கொரோனா வைரசு தடுப்பு மருந்தை இன்னும் ஓராண்டுக்குள் கண்டுபிடித்து விடுவோம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான முயற்சியில் பிரித்தானிய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் எவும் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் ஆரம்பமாகிய தீயநுண்மி(கொரோனா வைரசு) தொற்று உலகம் முழுவதும் பரவி தினம் தோறும் நூற்றுக் கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையடுத்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆராச்சிக்கு தலைமை வகிக்கும் பொதுசுகாதார ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் தலைவரும், விஞ்ஞானியுமான MILES CARROLL இன்னும் ஓராண்டுக்குள் மருந்தை கண்டுபிடித்து விடுவோம் என தெரிவித்துள்ளார்.