குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இந்த மருந்து தான் தீயநுண்மி கொரோனா வைரசை கட்டுப்படுத்தியது.. சீன அரசு வெளியிட்ட தகவல்..! வெளியான ஆய்

20.21.03.2020 வக உள்ளகத்தகவல்! தீயநுண்மி கொரோனா வைரசு தடுக்க இப்படி தான் செய்ய வேண்டும்..  தீயநுண்மிகொரோனா வைரசு எங்கு எத்தனை நாள்கள் உயிர் வாழும் என்பதை பற்றி முழு விபரத்தை பார்க்கலாம்.பார்வையாளர்களை வியக்க வைத்த சுட்டி குழந்தை!தீயநுண்மிகொரோனா வைரசு பாதிக்கப்பவர்களின் எண்ணிக்கை 2,20,000 பேரை எட்டியுள்ளது. உலகளவில் இந்த வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 90,000 ஐ நெருங்கியுள்ளது. முதன் முதலில் தீயநுண்மி கொரோனா வைரசு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் இப்போது பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சீன அரசு யப்பானின் புயீபுல்ம் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள Favipiravir என்ற மருந்து தீயநுண்மி கொரோனா வைரசு நோயாளிகளுக்குப் பெருமளவில் உதவியதாக சொல்லியுள்ளது. இந்த மருந்து எடுத்துக்கொண்டவர்களில் 340 பேர் முழுவதும் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மருந்துகளை சாப்பிட்ட 90 சதவீதம் பேருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தீயநுண்மி கொரோனா வைரசு தாக்கியதை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?.. வெளியான ஆய்வக உள்ளகத்தகவல்!

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் தீயநுண்மி கொரோனா வைரசு ஆனது, இதுவரை 90,000 ஆயிரம் பேரை பாதித்துள்ளது. 10,062 பேர் இறந்துள்ளனர். சீனா, இத்தாலி-யை தொடர்ந்து இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது.

இந்தியாவில் இதுவரை 206 பேர் பாதிக்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தீயநுண்மி கொரோனா வைரசு எப்படி ஆய்வாளர்கள் கண்டறியப்படுகிறார்கள் என்று இங்கு பார்ப்போம்.

குறிப்பாக தீயநுண்மி கொரோனா வைரசு தாக்கம் இருக்குமோ என்று சந்தேகம் எழும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்.

அதன் படி நோயாளிடம் இருந்து பெறப்பட்ட குருதி  மாதிரியை கொண்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, குருதியில் தீயநுண்மி கொரோனா வைரசு தொற்று உள்ளதா என்பதை அறிய ஆய்வகத்தில் ஆய்வு முடிந்த பின்னர் அதில் குறிப்பிட்ட மாற்றம் நிகழ்கிறதா என்பதை கண்டறிய 48 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

மேலும், சீனாவில் இருந்து உலக சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தீயநுண்மி கொரோனா பாதிப்புக்குள்ளானவரின் குருதிமாதிரியுடன் ஒத்துப் போனால் பாசிட்டிவ் அதாவது தீயநுண்மி கொரோனா பாதிப்பு உள்ளது என்பதை உறுதி படுத்தும் விதமாக சிவப்பு வண்ணத்தில் கோடு ஒன்று மேல் நோக்கி செல்வது போல குறிப்பிடபடுகின்றது.

ஒரு வேளை ஆய்வு முடிவிற்கு பின்னர் அது சாதாரண காய்ச்சல் என்பது தெரியவந்தால் கிடை மட்டமாக மெல்லிய கருப்பு வண்ண கோடு குறிப்பிடப் படுவதாக ஆய்வக ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஒருவருக்கு தீயநுண்மி கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் 2 நாட்கள் கழித்துதான் உறுதி செய்யப்படும். இதனால், நாளும் குறைந்த பட்சம் 10 முறையாவது சானிடைசர் மற்றும் சோப்பு கொண்டு கைகளை கழுவவதோடு, கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.

தீயநுண்மி கொரோனா வைரசு எத்தனை நாட்கள் உயிருடன் வாழும் தெரியுமா?.. வெளியான தகவல்..!

தீயநுண்மி கொரோனா வைரசு உலகையே அச்சுறுத்திகொண்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் தீயாய் பரவி வருகிறது, இந்தியாவில் இதுவரை 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேருக்கு கொரோனா வைரசு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீயநுண்மிகொரோனா வைரசு எங்கு எத்தனை நாள்கள் உயிர் வாழும் என்பதை பற்றி முழு விபரத்தை பார்க்கலாம்.

தீயநுண்மிகொரோனா வைரசு குறித்த ஆராய்ச்சியை அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் SARS-CoV-2 என்ற கொரோனா வைரசு, தும்மலின் போது வெளியாகும் நீர்துளிகளால் காற்றில் பரவும் வைரசு 3 மணி நேரம் வாழ கூடியவை என கூறப்பட்டுள்ளது.

மனித முடியை விட 30 மடங்கு சிறியதான வைரசு, காற்றில் பல மணி நேரம் உயிர் வாழக் கூடியவை. இந்த வைரசு, அட்டை பொருட்களின் மீது 24 மணி நேரம் வாழக்கூடியவை. பிளாசுடிக் மற்றும் சுடெயின்லெசு சுடீல் மேற்புறங்களில் 2 முதல் 3 நாள்கள் வரை வாழக்கூடியவை. கண்ணாடி மீது 96 மணி நேரங்கள் உயிருடன் இருக்க கூடியவை.

கதவு கைப்பிடிகள், பிளாசுடிக் பூசப்பட்ட மற்றும் இலாமினேட் செய்யப்பட்ட மேல்பரப்புகளில் அதிக நாள்கள் உயிருடன் இருக்கும். ஆனால், தாமிர தகடுகள் வைரசை 4 மணி நேரத்தில் கொல்லும் தன்மையுடையவை என கூறப்படுகிறது.

கிருமி நாசினி தெளிக்க முடியாத துணி வகைகளில், தீயநுண்மிகொரோனா வைரசு எத்தனை நாள்கள் இருக்கும் என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேற்பரப்புகளை 62 முதல் 71 சதவிகிதம் ஆல்ககால் கலந்த கிருமி நாசினியை தெளிப்பதன் மூலம் தீயநுண்மிகொரோனா வைரசை ஒரே நிமிடத்தில் அழித்து விடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் சோடியம் குளோரைட் கலந்த கைட்ரயன் பெராக்சைட் பிளிச்சை கொண்டு தூய்மைப்படுத்துவதன் மூலமும் தீயநுண்மிகொரோனா வைரசை விரைவாக அழிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதேப்போல் 56 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் தீயநுண்மிகொரோனா வைரசு உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள கூறுகின்றனர். 56 பாகையில் (டிகிரி செல்சியசு) வெப்ப நிலையில் 15 நிமிடங்களில் 10 ஆயிரம் தீயநுண்மிவைரசு துகள்கள் கொல்லப்படும்

தீயநுண்மி கொரோனா வைரசு தடுக்க இப்படி தான் செய்ய வேண்டும்.. பார்வையாளர்களை வியக்க வைத்த சுட்டி குழந்தை!

உலகமெங்கும் தீயநுண்மிகொரோனா வைரசுபரவி வரும் நிலையில் சீனாதீயநுண்மி  வைரசு பரவுவதை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஆனால் இத்தாலியில் அதி்மாக பரவி நாள் ஒன்று 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

இதையடுத்து, இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில், பாதுக்காப்பாக இருக்க அரசு பல முயற்ச்சிகளையும், விழிப்புணர்வுகளையும் கொடுத்து வருகிறார்கள்.

இதையடுத்து, குறிப்பிட்ட காணொளியில் குழந்தை ஒன்று குளிப்பதற்கு உடல் முழுவதும் சோப்பை போட்டு சுட்டித்தனமாக விளையாடி கொண்டிருப்பது பார்வையாளர்களை களிக்க வைத்துள்ளது. இந்த காட்சி ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.


 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.