11.10. 2011 பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வுத் திட்டம் எட்டப்பட வேண்டுமென இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய்க்கும், சனாதிபதி மகிந்த ராயபட்சவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு தமிழகம் சென்று தமிழர்களைப் பரபரப்புக்குள்ளாக்கி யெயலலிதா முதல்வரைச் சந்தித்து இலங்கையில் சுவையான தேநீர் பருகி்திரும்பியதேன்?.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆகியவற்றின் ஊடாக விரைவில் தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென ரஞ்சன் மாத்தாய் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மீனப் பிரச்சினைக்கு நிலையான தீர்வினை காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.