குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

புதுச்சேரியில் தற்போது மது வகைகளின் விலையை கிடுகிடுவென உயர்த்தி விட்டனர். இதனால் குடிமக்கள்அதிர்ச்சி

 10.10.2011-2 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விலையை உயர்த்தியுள்ளனராம். தமிழகத்தில் எப்படி டாஸ்மாக் மூலம் அரசு மது விற்பனை செய்கிறதோ, அதேபோல புதுச்சேரியில் பாப்ஸ்கோ என்ற நிறுவனத்தின் மூலம் புதுவை அரசு மது பானங்களை விற்கிறது. இந்தக் கடைகளில்தான் தற்போது விலை உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களை விட யூனியன் பிரதேசமான புதுச்சேரியில்தான் மது விலை மகா சகாயமாக உள்ளது. இதனால் புதுச்சேரி மக்களை விட பிற பகுதிகளைச் சேர்ந்த மக்கள்தான் பெருமளவில் இங்கு வந்து மது அருந்தி உற்சாகமாக இருப்பது அதிகம். தமிழகத்திலிருந்து குடிப்பதற்காகவே புதுச்சேரிக்கு வருவோர் எண்ணிக்கை அதிகம். வார இறுதி நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான குடிமக்கள் புதுச்சேரியை நாடி ஓடி வருவது வழக்கம்.

இந்த நிலையில்தான் மது பானங்களின் விலை உயர்ந்துள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக பாட்டிலில் போட்டு விற்க ஆரம்பித்துள்ளனர். குறைந்தபட்ச விலை 2 ரூபாய், அதிகபட்சம் 30 வரை உயர்த்தியுள்ளனர்.

தமிழகத்தில் மது விலை அதிகமாக இருப்பதால் புதுச்சேரி போய் குடிக்கிறோம், இப்போது புதுச்சேரியிலும் விலையை உயர்த்தினால் எங்கு போய் குடிப்பது என்று தங்கப்பதக்கம் பட வசன பாணியில் குடிமக்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.