குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சங்க கால ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட குளம் ( உ.பாண்டி )

`புதைந்து கிடக்கும் சங்க கால நகரம்!' - ராமநாதபுரத்தில் இருந்து ஓர் அகழாய்வு கோரிக்கை சன்னாப் மேடு என்னுமிடத்தில் செங்கலால் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தின் அடிப்பக்கம் மட்டும் உள்ளது. இதில் உள்ள உடைந்த ஒரு செங்கலின் அகலம் 15 செ.மீ உயரம் 6 செ.மீ ஆகும். இது அழிந்துபோன ஒரு கோயிலாக இருக்கலாம்.

16.10.2019 இராமநாதபுரம் அருகே சோழந்தூரில் வைகையின் கிளை ஆறான நாயாற்றின் கரையில் சிதறிக் கிடக்கும் கறுப்பு சிவப்பு பானை ஓடுகள் மூலம் புதைந்த நிலையில் ஒரு சங்ககால நகரம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இங்கு அகழாய்வு செய்ய அரசு முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சோழந்தூரில் சங்க கால ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட குளம் உ.பாண்டி

இராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குளங்களைத் தூர்வாரும்போது உடைந்த ஓடுகள் வெளிப்பட்டுள்ளன. அந்த ஊரைச் சேர்ந்த அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மூலம் இதை அறிந்த ஆங்கில ஆசிரியர் சுல்தான் ஜமீர் அலி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராயகுருவிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் மேற்பரப்பாய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு இது குறித்து கூறுகையில்,

''சோழந்தூரின் தெற்கில் இரண்டு பிரிவாகப் பிரிந்து ஓடும் நாயாறு, வைகையின் ஒரு கிளை ஆறாக இருக்கலாம். இது திருப்பாலைக்குடியில் கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் கரையில் உள்ள ஓடுகள் சிதறிக்கிடக்கும் மேடான பகுதியைத் திடல் என அழைக்கிறார்கள். குளங்களைத் தூர்வாரியபோது சுடுமண் உறைகிணற்றின் ஓடுகள், தடித்த, மெல்லிய கறுப்பு சிவப்பு பானை ஓடுகள் வெளிவந்துள்ளன. ஒரு சுடுமண் உறையின் உயரம் 16.5 செ.மீ, அகலம் 4.5 செ.மீ ஆகும். உறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குவது, செருகுவது என உறைகிணறுகளில் இருவகைகள் உண்டு. ஒரே அளவுள்ள இரு வட்டமான சுடுமண் உறைகளை ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய அமைப்பு கொண்ட கிணறு இங்கு இருந்துள்ளது.

சங்க கால ஓடுகள் குறித்து ஆய்வு  உ.பாண்டி

திடல் பகுதியில் கறுப்பு சிவப்பு பானை ஓடுகளுடன், வெள்ளைக் களிமண்ணால் உருவாக்கப்படும் சீனநாட்டு போர்சலைன் ஓடுகளும் காணப்படுகின்றன. இங்கு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக்கிடக்கின்றன. இங்கிருந்து ½ கி.மீ தூரத்தில் முதுமக்கள் தாழியின் ஓடுகளும் உள்ளன. இதற்கு இடைப்பட்ட பகுதியில் சன்னாப் மேடு என்னுமிடத்தில் செங்கலால் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தின் அடிப்பக்கம் மட்டும் உள்ளது. இதில் உள்ள உடைந்த ஒரு செங்கலின் அகலம் 15 செ.மீ. உயரம் 6 செ.மீ ஆகும். இது அழிந்துபோன ஒரு கோயிலாக இருக்கலாம். இதன் அருகில் கருங்கல்லால் ஆன முழுமையடையாத 5 அடி உயரமுள்ள அமர்ந்த நிலையிலான ஒரு திருமால் சிற்பம் உள்ளது. அதை முனீஸ்வரராக வழிபடுகிறார்கள். அதேபோல் குளத்தின் கிழக்கில் வட்ட வடிவ ஆவுடையாருடன் ஒரு சிவலிங்கமும் உள்ளது.

இவ்வூரில் சங்க கால கறுப்பு சிவப்பு பானை ஓடுகளுடன் இடைக்காலத்தைச் சேர்ந்த தடயங்களும் காணப்படுகின்றன. இவ்வூரின் பெயர் சோழர்களை நினைவுபடுத்துகிறது. சங்க காலம் முதல் இடைக்காலம் வரை பல நூற்றாண்டுகளாக இவ்வூர் சிறப்புற்று இருந்துள்ளது. சங்ககாலத்தைச் சேர்ந்த சர்வதேச வணிக நகரமான அழகன்குளத்தின் சமகால ஊரான இவ்வூர் அங்கிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

சங்க கால ஆய்வில் கிடைத்த சீன ஓடுகள் உ.பாண்டி

இராமநாதபுரத்திலிருந்து சோழந்தூர் செல்லும் வழியில் சக்கரவாளநல்லூர் சங்ககால, இடைக்கால வாழ்விடப் பகுதியாகவும் தேவிபட்டினம், சிங்கனேந்தல், முத்துசாமிபுரம் ஆகிய ஊர்கள் இடைக்கால வாழ்விடப் பகுதிகளாகவும் உள்ளன. மத்திய தொல்லியல்துறை அல்லது தமிழ்நாடு தொல்லியல்துறை இப்பகுதிகளில் அகழாய்வு செய்து இவ்வூரின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிக்கொணர முன்வர வேண்டும்'' என்றார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.