06.03.2019-பூநகாி மண்ணித்தலை பகுதியில் சோழா்களால் அமைக்கப்பட்ட சிவன் கோயிலை பாதுகாக்கும் வகையில் பூநகாி மண்ணித்தலைச்சோழீச்சரம் எனப்பெயர் சூட்டப்பட்டு நேற்று முதல்நாள் புதிதாக மகா சிவலிங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.மிகப் பழமையான மண்ணித்தலை சிவன்கோயில் நீண்டகாலமாக புனரமைப்பு செய் யப்படாமல் பராமாிப்பின்றி காணப்படுகின்றது.
இந்நிலையில், இந்தக்கோயில் சூழலை ஆய்வு செய்த யாழ்.பல்கலைக்கழக தொல்லியல்துறை, அது சோழா் காலத்தில் கட்டப்பட்ட சிவன் ஆலயம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அந்தகோயில் தொல்லியல் முக்கியத்துவம்வாய்ந்த பகுதி எனவும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. இதற்கு முந்திய பெருங்கற்பண்பாட்டு தொல்லியல் சாதனங்களும் பூநகாியில் பல இடங்கயில் கிடைத்துள்ளது. இந்நிலையில், அந்த கோயிலை பாதுகாக்கும் வகையில், சைவ மகாசபையினால் மகா சிவலிங்கம் ஒன்று அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் சிவராத்திாி நாளில் பூசை வழி பாடுகளுடன் திறந்துவைக்கப்பட்டது. நன்றி
நியுஸ் இலங்கா-செய்தி இலங்கை இணையத்திற்குநன்றிகள்.