உண்மை 1:
வடக்கில் இருந்து தென்னகத்திற்கு புலம்பெயர்ந்து வந்த ஆரியர்களான ராமனும் இலக்குவனும், இங்கே உயிர்பலி கொடுத்து யாகங்கள் நடத்துகிறார்கள். போர் தொடுக்கிறார்கள். தடாகை என்னும் தமிழ் அரசியை கொல்கிறார்கள். தடாகையை காக்க ராவணன் அனுப்பிய படைத்தலைவன் சுவாகுவையும், மாரீசனையும் கொலை செய்கிறார்கள்.
உண்மை 2:
இராவணின் தங்கையின் பெயர் சூர்ப்பனகை அல்ல. அவளது பெயர் காமவல்லி. இராமன் காமவல்லியை கவர நினைக்கிறார். ஆசைக்கு இணங்க மறுத்த காமவல்லியின் உறுப்புகளை இலக்குவன் அறுத்துக் கொலை செய்கிறார். காமவல்லியை காக்க இராவணனால் அனுப்பப்பட்ட கரனும் கொல்லப்படுகிறார்.
உண்மை 3:
தன் மக்கள் கொல்லப்பட்டத்தை அறிந்த இராவணன், விந்தகம் சென்று தன் தங்கை வளர்த்த மானை அனுப்பி சீதையை பிரித்து, ராமனிடம் இருந்து கடத்திச் சென்று இலங்கையில் தனது தங்கையாக போற்றினார். இது பீடணனுக்கு பிடிக்கவில்லை. சீதையை ராமனிடமே அனுப்புமாறு கோரினார்.