511. |
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். |
512. |
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. |
513. |
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. |
514. |
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர். |
515. |
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. |
516. |
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். |
517. |
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். |
518. |
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். |
519. |
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. |
520. |
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. |