01.10.2011-முடக்கப்பட்டுள்ள டூனிசியாவின் 67 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை திருப்பிக் கொடுப்பது முரண்பாடான நிலையைத் தோற்றுவிக்கும் என்று சுவிசு(ஸ்) நாட்டின் சொத்து மீள்எடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிசு(ஸ்) வெளியுறவு அமைச்சர் மிச்செலின் கால்மி-றே டூனிசியாவில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன்-டூனிசியா செயல் அணியின் கூட்டத்தில் பேசும்போது இதனைத் தெரிவித்ததுடன் ஐநாவின் பாதுகாப்புச்சபை இது தொடர்பாக தடை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பென்-அலி அரசாங்கத்துடன் தொடர்புடைய தடைசெய்யப்பட்ட நிதியை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சனவரி மாதம் பென் அலி அரசு தூக்கி எறியப்பட்ட பின்னர் முன்னாள் அதிபர் பென் அலி மற்றும் அவரின் குழுக்களுக்கும் உரிய நிதியை முடக்கி வைத்த முதலாவது நாடு சுவிட்சர்லந்து ஆகும். அந்நிதியை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை சுவிசு(ஸ்) கொண்டிருந்தாலும் சுவிசு(ஸ்) நாட்டின் சட்டம் அதற்கு இடங்கொடுப்பதாக இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.