குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வீட்டின் மொட்டை மாடியில் விண்ணுந்து தாயாரித்த இளம் விமானி

05.11.2017-மக்கள் நெரிசல் மிகுந்த இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள பெட்டி போன்ற அடுக்குமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் விமானம் ஒன்றை தயாரிக்க போவதாக 7 ஆண்டுகளுக்கு முன்னரே அமோல் யாதவ் தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்தார்.விமானத்தை தயாரித்த பிறகு கீழே கொண்டு வருவதற்கு எப்படி திட்டமிட்டிருக்கிறாய் என்று அவரது கூற்றை நம்பாத நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் இந்த இளம் விமானியிடம் கேட்டனர்.

 

“அது எனக்கு தெரியவில்லை” என்பது அவரது பதிலாக இருந்தது.

தன்னுடைய வாழ்க்கைக்காக இரட்டை எந்திரமுடைய டர்போபிரோப் விமானங்களை ஓட்டுகின்ற யாதவிடம் இந்த பிடிவாதம் மட்டும் இல்லை என்றால், அவரிடம் எதுவுமில்லை.

அவருடைய 19 உறுப்பினர்களை கொண்ட கூட்டுக் குடும்பம் வாழும் 5 மாடி கட்டடத்தில் மின்தூக்கி (லிப்ட்) இல்லை. எனவே, கடைசல் எந்திரங்கள், கம்பிரஷர்கள், வெல்டிங் எந்திரங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 180 கிலோ எந்திரம் ஆகியவற்றை மிகவும் குறுகிய படிக்கட்டு பாதை வழியாக மொட்டை மாடிக்கு அவர்கள் கஷ்டப்பட்டு தூக்கி சென்றனர்.

பிசுபிசுக்கும் கோடைக்காலத்திலும், பருவகால மழையிலும் யாதவும், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர் மற்றும் பாகங்களை ஒன்றிணைப்பவர் என அவருடைய குழுவும் ஒரு டென்னிஸ் மைதானத்தில் பாதி அளவுடைய 1,200 சதுர மீட்டர் கூடாரத்தின் கீழ் வேலை செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவருடைய 6 இருக்கை கொண்ட விமானம் தயாராகிவிட்டது.

யாதவின் கூற்றுப்படி இவ்வாறு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இதுபோன்ற முதல் விமானம், இதுதான்.

இதனுடைய எந்திரம் 13 ஆயிரம் கிலோமீட்டர் உயரம் வரை மேலெழுந்து பறக்கக்கூடியது சக்தியுடையது.

அதனுடைய எரிசக்தி கலனில் மணிக்கு 185 கடல் மைல் வேகத்தில் பயணித்து 2 ஆயிரம் கிலோமீட்டர் பறக்க தேவையான எரிபொருளை நிரப்ப முடியும்.

அந்த மொட்டை மாடியின் இடத்திற்குள் பொருந்துவதாக அந்த விமானம் இருக்கவில்லை. அந்த விமானத்தின் வால் பகுதி பக்கச்சுவரை தாண்டி புகைமூட்டமுள்ள வான்பரப்பில் புடைத்து வெளியே நீண்டி கொண்டிருந்தது.

“இப்போது இந்த விமானத்தை மொட்டை மாடியில் இருந்து கீழே கொண்டு சென்று மக்களிடம் காட்ட வேண்டும் என்று 41 வயதாகும் யாதவ் அவருடைய வீட்டில் வைத்து பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

மும்பையில் உலக பொருட்களின் தயாரிப்பு முனையத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு முன்முயற்சிக்கு பின்னால், ஒரு மாபெரும் இந்திய தயாரிப்பு கண்காட்சியை அரசு நடத்தி வருகிறது.

இதனை ஏற்பாடு செய்வோரிடம் தன்னுடைய விமானத்தை காட்சியில் வைப்பதற்கு அனுமதி கேட்டபோது, அங்கு இடமில்லை என்றுகூறி, அவர்கள் மறுத்துவிட்டனர்.

மும்பையின் மேற்கிலுள்ள பாந்திராவில் மாநாடுகள் நடைபெறும் திடலுக்கு சென்ற அவருடைய சகோதரர்கள், இந்த விமானத்தை காட்சிக்கு வைக்கக்கூடிய இடத்தை கண்டுபிடித்தனர்.

தாயகத்தில் தயாரிக்கப்பட்ட விமானத்தை காட்சிக்கு வைப்பதால் கிடைக்கக்கூடிய முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி பாதுகாப்பு பணியாளர்களை ஏற்றுகொள்ளவதற்காக அவருடைய சகோதரர்கள் உரையாடினர்.

“எனவே, இந்த விமானத்தை உலகிற்கு காட்டுவதற்கு ஒரே நாளிரவில் அந்த விமானத்தை பிரிக்க முடிவு செய்தோம்” என்கிறார் யாதவ். .

ஒரு நாள் மாலையில், யாதவும், அவருடைய குடும்பத்தினரும் அந்த விமானத்தை பிரித்தனர்.

இந்திரம், இறக்கை, வால் மற்றும் உடற்பகுதியை அவர்கள் அகற்றினர். எந்திர பாகங்களை தூக்குவதற்கு அவர்கள் மொட்டை மாடியில் பொருத்தியிருந்த கிரைனை பயன்படுத்தி பிரித்த விமான பாகங்களை டிரக் நின்று கொண்டிருந்த சாலைக்கு இறக்கினர். அண்டை வீட்டுக்காரர்கள் பெருங்கூட்டமாக அங்கு குவிந்தனர்.

ஒரு சமயம் கிரேன் தடங்கலுக்கு உள்ளானது. 30 மீட்டர் நீள விமானத்தின் உடல் பகுதி கீழே இறக்கப்படும்போது, நடுவழியில் தொங்கியது.

“எனக்கு மாரடைப்பே வந்துவிடும் போலிருந்தது. கிரேன் உடைந்துவிடும், விமானத்தின் உடல்பகுதி சாலையில் விழும் என்று எண்ணினோம். சில நிமிடத்திற்கு பின்னர், கிரேன் மீண்டும் வேலை செய்ய தொடங்கியது. எல்லாம் நன்றாக முடிந்தது” என்றார் யாதவ்

பிரிக்கப்பட்டிருந்த விமானம் மெதுவாக சேர்க்கப்பட்டன. நள்ளிரவில், நகரின் வெறுமையாக கிடந்த சாலையில் கொண்டு செல்லப்பட்டது. விமானத்தின் உடல் பகுதி வாகனம் ஒன்றால் கட்டி இழுக்கப்பட்டு 25 கிலோமீட்டர் தொலைவில் இருந்த கண்காட்சி மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கே, பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை உள்ளே அனுமதித்தனர். யாதவும், அவருடைய தொழில்நுட்ப பணியாளர்களும் ஆணையிட இந்த அணி 3 மணி நேரத்திற்குள் அந்த விமானத்தை பொருத்திவிட்டது.

சில மணிநேரங்களில் தொடங்கிய கண்காட்சியில். பெவிலியனுக்கு அருகிலுள்ள வெற்றிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த விமானம், ஆர்வமுள்ள பார்வையாளர்களை ஈர்க்க தொடங்கியது.

உள்ளூர் செய்தித்தாளும், செய்தி சானல்களும் இந்த செய்தியை வெளியிட்டன. மக்கள் கூட்டம் இந்த விமானத்திற்கு சுயப்படம் எடுத்துகொள்ளும் அலைகடல் பார்வையாளர்களை கொண்டதாக மாறியது.

இந்தியாவின் விமானத்துறை அமைச்சர், மூத்த அதிகாரிகள் மற்றும் வணிகர்களின் வட்டாரம் இதனை பார்வையிட வந்தது.

இந்த விமானம் எவ்வளவுக்கு விரைவாக பிரபலம் அடைந்ததோ, அவ்வளவுக்கு விரைவாக அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டது. அதன் கூரை வானில் பறப்பதற்கு சாத்தியப்படும் தெரிவாக அமையவில்லை.

அடுத்த 15 மாதங்களுக்கு மேலாக இந்த விமானம் அருகிலுள்ள கோவில் கோட்டையில் கிடந்தது. விமானக் கண்காட்சிக்கு கொண்டு செல்லப்பட்டு மும்பை விமான நிலையத்திற்கு வெளியே கொள்கலன் டிரக்கில் நின்று கொண்டிருந்தது.

மே மாதம் இது மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தப்பியோடிய பில்லினியருக்கு சொந்தமான தனியார் ஏர்பஸ் விமானத்திற்கு அடுத்ததாக நிறுத்தி வைக்கப்பட்டது.

வணிக ரீதியிலான இந்தியாவின் முதலாவது உள்நாட்டு தயாரிப்பு விமானங்களை தயாரிக்க இப்போது தயாராக இருப்பதாக யாதவ் தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்களும் இதில் ஆர்வம் காட்டியுள்ளனர். உள்ளூர் பாரதிய ஜனதா கட்சி அரசு 19 இருக்கைகள் உடைய விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைக்க 157 ஏக்கர் நிலம் வழங்க வாக்குறுதி அளித்துள்ளது.

இந்தியா 450 வணிக ரீதியான விமானங்களை கொண்டுள்ளது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடர்ச்சியாக முன்னேற்றம் கண்டு வருகிறது.

முதலீட்டாளர்களாலும், அரசாலும் நிதி ஆதரவு அளிக்கப்படும் இவருடைய தொழிற்சாலையால் சிறிய விமானங்களை தயாரிக்க முடியும் என்றும் பிரதேச வான்வழி தொடர்புகளை அதிகரித்து, வேலைவாய்ப்புக்களை பெருக்கலாம் என்றும் யாதவ் நம்புகிறார்.

இந்தியாவின் முதலாவது உள்நாட்டு நவீன தயாரிப்பாக மாறுகின்ற யாதவின் கனவுக்கு வழியில் பெரியதொரு சிக்கலும் உள்ளது.

உள்ளூர் அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி அலுவலகத்தில் இருந்து வந்துள்ள வேண்டுகோள்கள் இருந்தாலும், இந்தியாவின் விமான ஒழுங்காற்று நிறுவனம் இவரது விமானத்தை பதிவு செய்ய 6 ஆண்டுகளாக எவ்வித முடிவும் எடுக்காமல் இழுத்தடித்து வருகிறது.

விமானத்தை அடையாளம் காண ஒரு தனிப்பட்ட ஆல்பாநியூமரிக்கை விமான ஒழுங்காற்று நிறுவனம் அளிப்பதோடு, வானில் பறப்பதற்கு ஏற்றதாக விமானத்தின் கூரைக்கு இது சான்றும் அளிக்கிறது.

“அவர்கள் விதிமுறைகளை மாற்றிக்கொண்டே இருப்பது என்னை வெறுப்படைய செய்துள்ளது” என்கிறார் யாதவ்.

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தொழில்முறையற்றதாக கட்டப்படும் விமானங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான வடிவமைப்பு தரத்தை உருவாக்க வேண்டியுள்ளது என்று விமான ஒழுகாற்று நிறுவனம் கூறுகின்றனது.

பல்வேறு வழிமுறைகளில் தான் வாழும் நகரத்தில் யாதவ் உயிரூட்டலை செறிவாக்கி வருகிறார்.

“நீங்களே துணியை நெசவு செய்யுங்கள், வாய்ப்புக்களை பற்றிக் கொள்ளுங்கள், படித்திருந்தாலும். படிக்காமல் இருந்தாலும், வாழ்வதற்காக” என்று மும்பை பற்றி ஆசிரியர் கயான் பிரகாஷ் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.

1998 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட டிரக் ஒன்றின் 5 சிலிண்டர் பெட்ரோல் எந்திரத்தை 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய யாதவ், தன்னுடைய முதலாவது விமானத்தை தயாரிக்க முயற்சித்தார். ஆனால் அதிக தவறு செய்துவிட்டதால் அந்த முயற்சியை அவர் சீக்கிரமாகவே கைவிட்டார்.

அடுத்த ஆண்டு 8 சிலிண்டர் மோட்டார் வாகன எந்திரத்தையும், வான்வழி பற்றிய பயன்படுத்திய பின்னர் விற்கப்படும் சில 50 புத்தகங்களையும் சந்தையில் இருந்து வாங்கி விமானங்களை எவ்வாறு செய்வது என்று வாசித்து தெரிந்து கொண்டார்.

பின்னர் ஒரு கட்டுமான இடத்தில் உள்ள குடிசையில் 6 இருக்கைகள் உடைய விமானத்தை நான்கு ஆண்டுகள் செலவிட்டு தயாரித்தார், பக்கத்திலுள்ள சாலையில் ஓட்டி அதனை சோதிக்கவும் செய்தார்.

2004 ஆம் ஆண்டு, டெல்லிக்கு பணம் மேற்கொண்ட அவர், விமானத்தை பதிவு செய்வதற்கு உதவ மூத்த அமைச்சர் ஒருவரை சந்தித்தார்,

இவர் ஒரு விமானத்தை தயாரித்துள்ளார். அதனை அவர் சோதனை செய்யட்டும் என்று விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடம் அமைச்சர் தன்னுடைய வீட்டில் வைத்து தெரிவித்தார்.

“அவர் மேலெழுந்து சென்று, பின்னர் மோதி விடுவார் சார்” என்று அந்த முயற்சியை நீக்கிவிடும் வகையில் அந்த சந்திப்பில் அதிகாரி பதில் கூறியதை யாதவ் நினைவுகூர்கிறார். விமானம் கட்டுமான இடத்தின் தளத்தில் கிடந்தது, திருடர்கள் அதன் பகுதிகளை அகற்றிவிட்டனர்.

5 ஆண்டுகளில் அவருடைய மூன்றாவது விமானத்தை தன்னுடைய வீட்டின் மாடியில் அவர் தயாரித்தார்.

இன்னும் ஓராண்டில் 19 இருக்கைகள் உடைய விமானத்தின் மாதிரியை உருவாக்க மீண்டும் வீட்டின் மொட்டை மாடிக்கே அவர் திரும்பியுள்ளார்.

தன்னுடைய கனவை நனவாக்க அவர் தன்னுடைய மற்றும் அவருடைய குடும்பத்தினரின் 8 லட்சம் டாலரை செலவிட்டுள்ளதோடு, சொத்துக்களை விற்றுள்ளார். குடும்ப அணிகலன்களை அடமானம் வைத்துள்ளார்.

என்னை போன்ற பொது மக்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் இந்தியாவில் ஒரு பொருட்டாக கண்டுகொள்ளப்படுவதில்லை. என்னை விமானத்தில் பறக்க அனுமதித்தால், இந்தியாவில் விமான தயாரிப்பு வரலாற்றை உருவாக்குவேன் என்கிறார் யாதவ் நம்பிக்கையுடன்.

படங்கள்: அனுஸ்ரீரீ மற்றும் யாதவ் குடும்பம்