27 .09. 2011 சிறிலங்கா அரசுக்கு போதைப் பொருள் வர்த்தகர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர் எனவும் இவர்களில் பிரதான நபராக பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மர்வின் சில்வா விளங்குகிறார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2010 ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இலங்கையின் அமெரிக்கத் து{துவர் பற்றீஸியா புற்றினிஸ் A leaked US embassy cable reviled “drug kingpins in SriLanka have political patrons in the government”. என்ற தலைப்பில் அனுப்பியிருந்த இராஜதந்திர தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் விக்கி லீக்ஸை ஆதாரம் காட்டி கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் அவரது மகன் மாலக சில்வா ஆகியோர் ‘எக்டாஸி’ என்ற பெயரில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர் என்றும் அந்தக் கேபிளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிறிலங்காவில் முஸ்லிம்களே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகக் காட்டி அவர்களை ஓர் இக்கட்டான நிலைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபட்டனர் எனவும் அந்தக் கேபிளில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.