குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி

19.09.2017-  அறிவி ப்விப்பிற்க்கும். பதிலளிக்காத   டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியார உத்தரவிட்டனர்.அதிமுகவின் இணைப்பு நிகழ்ச்சிக்கு பிறகு முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து தனது கவனத்துக்கு வராமல் நேரடியாக 19 பேரும் ஆளுநரை சந்தித்ததாக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சபாநாயகர் தனபால் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ யக்கையன், எடப்பாடி அணியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து மீதமுள்ள 18 எம்எல்ஏக்களும் நேரடியாக விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டும் அவர்கள் சபாநாயகரை சந்திக்காமல் கூர்க் விடுதியில் தங்கியிருந்தனர். இதனிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஆளுநரிடமும், நீதிமன்றத்திடமும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூடி சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் ஆட்சியை கவிழ்க்க தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் ராயினாமா செய்யக் கூடும் என்று எதிர்பார்த்த வேளையில் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்திய அரசியலமைப்பு அட்டவணை 10-இன் படி தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.