குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

பிரதேசவாதத்தை கைவிடுங்கள்- பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்- யோகேசுவரன்!

27.09.2011-திருவள்ளுவராண்டு.2042-பிரதேசவாதம் பேசுவதை இனிமேலாவது கைவிட்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவ வடக்கு கிழக்கு என்ற பேதம் இன்றி உதவ முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேசுவரன் இன்று பரிஸ் நகரில் நடைபெற்ற ஒன்று கூடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
பாரிசில் உள்ள லாபோசு என்னுமிடத்தில் இன்று பி.ப 3 மணியளவில் வட்டக்கச்சி இராமநாதபுரம் ஒன்றியத்தினால்  ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் ஒன்றில் பேசும் போதே மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் இதனைத்தெரிவித்தார்.
பிரதேசவாதத்தை இனிமேலும் பேசிக்கொண்டிருகாமல் போரினால் பாதிக்கப்பட்ட எமது தாயகத்தை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் உதவ முன்வர வேண்டும் என அவர் வடகிழக்கு புலம்பெயர் தமிழர்களுக்கு அறைகோவல் விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ முன்வருபவர்கள் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற பேரவையினுடாக உதவலாம் எனவும் வடக்கும் கிழக்கும்  இரு கண்கள் எனவும் இதில் எந்த மாற்றுக் கருதுக்கும் இடமிருக்க முடியாது  எனவும் அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது பாரிய பொறுப்பை ஒப்படைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் உரையாற்றினார்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.