27.09.2011-திருவள்ளுவராண்டு.2042-பிரதேசவாதம் பேசுவதை இனிமேலாவது கைவிட்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவ வடக்கு கிழக்கு என்ற பேதம் இன்றி உதவ முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேசுவரன் இன்று பரிஸ் நகரில் நடைபெற்ற ஒன்று கூடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
பாரிசில் உள்ள லாபோசு என்னுமிடத்தில் இன்று பி.ப 3 மணியளவில் வட்டக்கச்சி இராமநாதபுரம் ஒன்றியத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் ஒன்றில் பேசும் போதே மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேசுவரன் இதனைத்தெரிவித்தார்.
பிரதேசவாதத்தை இனிமேலும் பேசிக்கொண்டிருகாமல் போரினால் பாதிக்கப்பட்ட எமது தாயகத்தை கட்டியெழுப்ப புலம்பெயர் தமிழர்கள் உதவ முன்வர வேண்டும் என அவர் வடகிழக்கு புலம்பெயர் தமிழர்களுக்கு அறைகோவல் விடுத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ முன்வருபவர்கள் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற பேரவையினுடாக உதவலாம் எனவும் வடக்கும் கிழக்கும் இரு கண்கள் எனவும் இதில் எந்த மாற்றுக் கருதுக்கும் இடமிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது பாரிய பொறுப்பை ஒப்படைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் உரையாற்றினார்.