போர்க்குற்றத்தை விசாரி என்று ஒப்பாரி குறைவயிற்றிற்க்கு என்னவழி.
குடியேற்றமென்று ஒப்பாரி குடியேறிறவர்கள் வாழவழியில்லையென்று ஒப்பாரி
சிங்களவன் வெட்டுகிறான் சித்திரவதைசெய்கிறான் எனத்மிழன்கத்துகிறான்.
தமிழிச்சி தெருவிலே கற்பமாகி தெருவிலேகுழந்தையை வீசுங்காலமாகிப்போச்சு
மேற்கிலே தமிழ்குமரிகள் கும்மாழம் வாழத்தெரியாது மாழப்போகிறார்கள்.
தமிழினமே கற்பென்பதை இழந்து தவிக்கிறது தமிழகத்தில் பொருளாதாரப்புரட்சியாம்
ஈழத்தில் அரசியல்புரட்சியாம் பறிக்கப்பட்டது மனிதஉரிமையா? மங்கையர் கற்புமே!
ஆணில்லாத ஆண்களாக தமிழ்ப்பெண்கள் சுமைதாங்கியைதாங்கும் மங்கையின்கைகள்.
அந்தமங்கை மார்பைப் பொத்துவதா? மடியைப்பொத்துவதா மாநகரசபைக்குள்
மார்பைநசித்த மந்திரிநண்பன் நாட்டாண்மை செய்கின்றான்.மனதுதுடிக்கிறது.
தமிழ்ஆண்மகன் வாயைப்பொத்துகிறான் உயிர்போய்விடுமென அஞ்சுகிறான்.
நரகமென்று அஞ்சினோம் யாழ் வன்னி நரகத்தில் வாடுகின்றோம் புழுவாய்நெழிகின்றோம்.
ஊடகங்களின் உப்புச்சப்பு இல்லா தலைப்புகள் பயனற்பரபரப்புகள் பலனேதுமின்றி
அய்.நா அ.ய்நா.என்று அடுத்தஅடுத்து செய்திவெளியிட்டதே தவிர வேறேதுசெய்தது.
உத்தியோகப்பற்றான நடவடிக்கைகள் குறைவு உதவாததெருக்கூத்து அதிகம்.
உலகெங்கும் நிகழ்தது சிங்களம் ஊமையாய்யிருந்து வென்றதுதந்திரமாய் வென்றது.