வெள்ளமுள்ளிவய்க்கால் பதுங்குகுழிகளில் இந்த ஆதாரங்கள் திரட்டப்பட்டன.
இந்த சகல தரவுகளும் அமெரிக்க நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும்.
அமெரிக்கப் பல்கலைக்கழகம் என்னும் அரச சார்பற்ற நிறுவனம் கடந்த 23ம் திகதி நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில் தமக்கு எதிராக வழக்கு தொடர்ந்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிராக வழக்குத் தொடரும் சதித் திட்டத்தின் பின்னணியில் ருத்தரகுமாரன் செயற்பட்டுள்ளார்.
தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் அமெரிக்கக் கிளை, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் இலங்கைக்கு வழங்கிய அதி சக்தி வாய்ந்த தொடர்பாடல் சாதனங்கள் பற்றிய தகவல்களும் வெளியிடப்படும்.
சில வகை தொடர்பாடல் சாதனங்கள் அமெரிக்க படையினரால் பயன்படுத்தப்படும் சாதனங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க நீதிமன்றில் தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.