குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

புலிகளுக்கு உதவியோர் பற்றிய இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும் : சவேந்திரா சில்வா

26.09.2011.திருவள்ளுவராண்டு.2042-தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியோர் பற்றிய இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேயர் யெனரல் சாவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் சட்ட ஆலோசகராக செயற்பட்ட ருத்ரகுமாரன், தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்கள் இலங்கையில் பயங்கரவாதத்தை வியாபிப்பதற்கு எவ்வாறு உதவி வழங்கினார்கள் என்பது பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன.

வெள்ளமுள்ளிவய்க்கால் பதுங்குகுழிகளில் இந்த ஆதாரங்கள் திரட்டப்பட்டன.

இந்த சகல தரவுகளும் அமெரிக்க நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும்.

அமெரிக்கப் பல்கலைக்கழகம் என்னும் அரச சார்பற்ற நிறுவனம் கடந்த 23ம் திகதி நியூயோர்க் மாவட்ட நீதிமன்றில் தமக்கு எதிராக வழக்கு தொடர்ந்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எதிராக வழக்குத் தொடரும் சதித் திட்டத்தின் பின்னணியில் ருத்தரகுமாரன் செயற்பட்டுள்ளார்.

தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் அமெரிக்கக் கிளை, தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் இலங்கைக்கு வழங்கிய அதி சக்தி வாய்ந்த தொடர்பாடல் சாதனங்கள் பற்றிய தகவல்களும் வெளியிடப்படும்.

சில வகை தொடர்பாடல் சாதனங்கள் அமெரிக்க படையினரால் பயன்படுத்தப்படும் சாதனங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க நீதிமன்றில் தமக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்து ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.