குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அதிமுக விழாவில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு-எம்.யீ.ஆரின் நண்பர்கலைஞர்.

16.08.2017-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் எம்யிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எம்.யி.ஆர் நூற்றாண்டு விழா திருவாரூரில் வருகிற 19ம் திகதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார்.

பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொள்ள திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கும், மன்னார்குடி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராயா, திருத்துறைப்பூண்டி திமுக எம்எல்ஏ ஆடலரசன் ஆகியோருக்கும் தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா அணியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கும், டிடிவி தினகரன் அணிக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், எம்யிஆர் நூற்றாண்டு விழாவில் கருணாநிதி உள்ளிட்ட திமுகவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.