குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

சிறிலங்கா அதிபரிடம் பாலித கொகன்ன கூறிய “இரகசியம்“ – இன்னர்சிற்றி பிரசிடம் சிக்கியது

26.09.2011.திருவள்ளுவராண்டு.2042-சனல்-4 தொலைக்காட்சி தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை இன்னமும் பார்வையிடாத ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், அதற்குப் போட்டியாக சிறிலங்கா அரசு தயாரித்த "Lies Agreed To," ஆவணப்படத்தைப் பார்வையிட்டிருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது. ஐ.நா தலைமையகத்தில் நேற்றிரவு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சந்தித்து விட்டு சிறிலங்கா அதிபர் தலைமையிலான குழு வெளியே வந்தது.

பான் கீ மூனைப் பற்றி சாதாரணமாகப் பேசியவாறே சிறிலங்கா குழுவினர் சந்திப்பு அறையில் இருந்து வெளியே வந்தனர்.

அப்போது, “நாங்கள் அவருக்கு அனுப்பிய காணொலியை அவர் ஏற்கனவே பார்வையிட்டுள்ளார்“ என்று சிறிலங்கா அதிபரைப் பார்த்து, பாலித கொஹன்ன கூறியுள்ளார்.

இதனை இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளர் மத்யூ ரசல் லீ காணொலியில் பதிவு செய்துள்ளார்.

பாலித கொஹன்ன கூறியது ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துக்குப் போட்டியாக சிறிலங்கா அரசாங்கம் தயாரித்த "Lies Agreed To," ஆவணப்படமே என்று இன்னர்சிற்றி பிரஸ் கூறியுள்ளது.

சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தின் ஒரு இறுவட்டு ஐ.நா பொதுச்செயலருக்கு அனுப்பப்பட்டு நீண்டநாட்களாகியும் அவர் அதனைப் பார்வையிடவில்லை.

ஐ.நா பொதுச்செயலர் இந்த ஆவணப்படத்தை இன்னமும் பார்வையிடவில்லை என்றும், ஆனால் அதன் உள்ளடக்கம் பற்றி அவர் அறிந்து கொண்டுள்ளதாகவும் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி கடந்த 22ம் நாள் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.