அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில், ”தமிழ் கட்சிகளான நாங்கள் எங்களுக்குள் பேதங்களை மறந்து தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒரு பொதுவிடயத்திற்காக ஒன்றினைந்து செயற்படவேண்டும்.
நாங்கள் எதையும் தனித்து செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். எமது மக்களின் பிரச்சனைகள் குறித்து வாய்திறக்க முடியாத நிலையில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ளது.
இன்று தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருக்கின்றார்கள். காணி பதிவுகளை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தி மக்களின் காணிகளை பறிமுதல் செய்வதற்கு அரசு முயற்சிக்கிறது. தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லா பிரச்சினை. வாழ வீடுகள் இல்லாமல் எத்தனை மக்கள் மர நிழல்களில் வாழ்கின்றார்கள்? எமது தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் கட்சிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றினைய வேண்டும்” என்றார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாடு அதன் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோதராதலிங்கம் மற்றும் ரெலோவின் அரசியல் பிரிவுத் தலைவர் என்.கே.சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப அணி சிறிதரன், ரெலோ உதயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம் மாநாட்டில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். கொள்கை விளக்க உரைகள் ஆற்றப்பட்டதுடன் கட்சியின் தீர்மானங்கள் அடங்கிய ஆவணங்களும் வெளியிடப்பட்டன.