குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

உங்கள் பிரச்சினையை நீங்களே தீர்த்திருந்தால் வெளிநாடுகள் ஏன் தலையிடுகின்றன? : மகிந்தவிடம் மன்மோகன் ?

 25.09.2011-திருவள்ளுவராண்டு.2042-இலங்கை தமது பிரச்சினையை தாமே தீர்த்துக்கொள்ளுமானால் வெளிநாடுகளில் தலையீடு அவசியம் இல்லை என இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.இந்த கருத்தை இந்திய பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவிடம் தெரிவித்துள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினையை இந்தியா வெற்றிகரமாக கையாளுமாக இருந்தால், வெளிநாட்டு தலையீடுகள் அவசியம் இல்லை என்று மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமரும் இலங்கை சனாதிபதியும் நேற்று முன்தினம் நியூயோர்க்கில் வைத்து சந்தித்தனர்.

இதன்போது வெளிநாட்டு தலையீட்டை தடுக்க இலங்கை தமிழ்மக்களின் பிரச்சினையை உரிய வகையில் தீர்க்க வேண்டும் என்று மன்மோகன்சிங் கூறியதாக இந்திய பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மகிந்த ராசபக்ச, ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற உரையின்போது இலங்கையின் பிரச்சினையை தீர்க்க வெளிநாடுகளின் தலையீடு அவசியமில்லை என்று கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் முகமாகவே மன்மோகன்சிங் தமது கருத்தை கூறியதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.