இந்திய பிரதமரும் இலங்கை சனாதிபதியும் நேற்று முன்தினம் நியூயோர்க்கில் வைத்து சந்தித்தனர்.
இதன்போது வெளிநாட்டு தலையீட்டை தடுக்க இலங்கை தமிழ்மக்களின் பிரச்சினையை உரிய வகையில் தீர்க்க வேண்டும் என்று மன்மோகன்சிங் கூறியதாக இந்திய பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மகிந்த ராசபக்ச, ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற உரையின்போது இலங்கையின் பிரச்சினையை தீர்க்க வெளிநாடுகளின் தலையீடு அவசியமில்லை என்று கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் முகமாகவே மன்மோகன்சிங் தமது கருத்தை கூறியதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.