24 .09.2011முல்லைத் தீவில் 87 இடங்களும், வவுனியாவில் 110 இடங்களும், மன்னாரில் 40 இடங்களும், யாழ் ப்பாணத்தில் 50 இடங்களும வடக்கில் தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த 400 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சித் திணைக்கள ஆணையாளர் நாயகம் டொக்டர் செனரத் திசாநாயக்க தெரிவித்துள்ளார். தமிழர்கள் வரலாறு படிக்காதது படிப்பினையாகிறது.
முல்லைத்தீவில் 87 இடங்களும், வவுனியாவில் 110 இடங்களும், மன்னாரில் 40 இடங்களும், யாழ்ப்பாணத்தில் 50 இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறித்த இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் பல வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் உதவியுடன் ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன
மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பூர்த்தியாவதற்கு முன்னதாக குறித்த தொல்பொருள் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளப்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மீள் குடியேற்றப்பட்ட சில பிரதேசங்களிலும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் காணப்படவதாகத் தெரிவித்துள்ளார்.