குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

ஞாயிறுகுடும்பத்தில் புதிய கோள்போன்ற விண்பொருள் கண்டுபிடிப்புசெவ்வாய் கிரகத்தை விட பெரியதெனக்கணிப்பு.

27.06.2017-ஞாயிறுக்குடும்பத்தில் செவ்வாய் கோள் போன்ற விண்பொருளை அமெரிக்காவின் அரிசோனா பல்க லைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.ஞாயிறுக்குடும்பத்தில் இருக்கும் கோள்கள் பற்றிவெகு காலமாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இதுவரை சூரியக்குடும்பத்தில் 9 கோள்கள் இருப்பதாக கூறப்பட்டது.

 

பின்னர், புளூட்டோவுக்கு கோள்களுக்கான தகுதிகள் இல்லை என கூறி கோள்களின் பட்டியலில் இருந்து புளூட்டோ கடந்த 2006ல் நீக்கப்பட்டது.இதையடுத்து, தற்போது, செவ்வாய் கோள் போன்ற விண்பொருள் ஒன்று சூரியக்குடும்பத்தின் எல்லையில் இருப்பதை அரிசோனா பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விண்பொருள் புளூட்டோவுக்கு மிக அருகில் இருப்பதாக கூறியுள்ள விஞ்ஞானிகள், அதன் காந்த விசையை பொருத்தே அது கோளா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், விஞ்ஞானிகளின் கருத்துப்படி செவ்வாய் கிரகத்தை விட இந்த கோள் பெரிதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.