குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

கம்பன் ஏமாந்தான் இளம்கன்னியிடம். சம்மந்தர் ஏமாந்தார் மகிந்தரிடம்.24.09.2011

 அமீர்ஏமாந்தார் யே.ஆரிடம்.யேஆர் கேட்டார் அமீரிடம்
   என்னை வெல்லவையுங்களென்றார் வென்றதும் ஏமாற்றினார்.
இராசதுரையை உடைத்தார் 1977 கலவரத்தை ஏற்படுத்தினார்
    பயங்கரவாதம் என்ற சொல்லை உலகிற்கே அறியப்படுத்தினார்.

தமிழர்களே பயங்கரவாதிகளென்றார் கடும்சட்டங்கொண்டுவந்தார்
   பாதுகாப்பு அமைச்சை உருவாக்கினார் லலித்தை அமைத்தார்
போர்ரென்றால் போர்என்றார் தமிழ்த்தரப்பை வெளியேற்ச்சட்டம்
   மிதவாம் தீவிரவாதம் எதிராக்க திம்புப்பேச்சாக்கினார்.
மிதவாதம் அமுங்கியது தீவிரவாதத்தை  முன்னிழுத்து படிப்படியாக
   சிதைத்து வெற்றிகண்டார் புலிப்பயங்ரவாதப்போரென்றார்
வளத்தகடா மார்பில் பாயுமென்றார் இந்திய ஆமியைஅழைத்தார்
   தமிழரையும் இந்தியாவையும் சிக்கவைத்தார் சிரித்தார்.
வளத்தகடா ராயீவில் பாய்ந்ததும் திட்டத்தில்வென்றார் உலகில்
   தமிழர்கள் பயங்கரவாதிளென்றார் சந்திரிக்காவந்தார்
தீர்வுப்பொதியை உருவாக்கினார் அவரைஉலகுநம்பியது அதுபுரியாது
  தமிழர்தரப்பினர் குழப்பினர் தலதாமாளிகை மத்தியவங்கித்
தாக்குதலைவைத்து சந்திரிக்கா உலகப்பிரச்சாரத்தில் வென்றார்
  கதிர்காமரைப் பயன்படுத்தினார் அவர்கொலையையும்
உலகஅரங்கில் பயன்படுத்தினார் உலகில்புலித்தடை உருவானது.
  அதுபுரியாது போர்மாயையில் மக்களை வைத்திருந்தனர்
பாலாபேச்சில் மீண்டனர் உலகஅங்கிகாரத்தில் நுழைந்தனர்
 போரில்லையேல் தமதுதகுதி கேள்விக்குறியென எண்ணி
போரையே நாடினர் குடிமக்களின் நீரை அடைத்தனர் மடமைசெய்தனர்
  தரணம் பார்த்த மகிந்தர் சண்டையை தொடங்கினார் எதிர்ப்பே
இல்லாது கிழக்கை வென்றார். அங்குஅபிவிருத்தியென்றார் நம்பவைத்தார்
  வடக்கில் தொடங்கினார் முள்ளிவாய்காலில் முடித்தார் தப்பியதமிழரை
வவுனியாவில் அடைத்தார் உலகின் உதவிகளைப்பெற்றார் தமிழர்களின்
 வளங்களை சிங்களவர்களின் கைக்குமாற்றினார் இராணுவத்தின்
பசியை இரகசியமாகத்தீர்கச்சொன்னார் தம்பிசொன்னார் ஆண்கள்
   கடலுக்கு பெண்கள் இராணுவத்திற்கு சரணடைந்தவர்களுக்கு
வைத்து சாப்பாடுபோட எமக்கு வேறுவேலையில்லையா என்றார்.
 இதைக்கூட ஆதாரமாகக் கொள்ளாத தே.கூ.அமைப்பாகநாம்.
இன்றுபேசத்தான் வேணும் ஆனால் தமிழ்த்தரப்பை பலப்படுத்தவேண்டும்
   மாறாகசம்மந்தர் சுமந்தர் தமிழர்களைப்பிரித்து தமதுதலைமையை
மட்டும் காக்க உலகஅரங்கில் மகிந்தரைக் காத்ததைதான் மறைமுகமாக
   சங்கரிவளர்திடுவார்  என்றஅச்சத்தில் சங்கரிமகன்கனடாவுடன்
கொண்டுவந்த தீர்மானத்தை மறைமுகமாகத்தடுத்தவிட்டீர்கள் சரியா?
   பழையபகை உங்கள்தகமை பதவியைவிட்டு ஈழத்தமிழினத்தை
மீட்க விட்டுக்கொடுத்து ஒன்றுசேர்த்து கொழும்பிலும் பலமாகிக்காட்ட
  தரணமிது தம்பட்டமில்லாது சம்மந்தர் காரியமாற்றினாலென்ன?

இவற்றால்தான்  கீழுள்ளவாறு ஏமாந்தார் மகிந்தரிடம் 2011இல்  அதைவைத்து
அமெரிக்கா நியோக்கில்வென்றார் மகிந்தர்.

சமந்தர்  சுமந்தர்  மகிந்தர
     சமரசம் என்ன? தமிழரின் கட்சியாய்  எங்களை ஏற்கவேண்டும்.
என்தலைமையை காக்கவேண்டும் உதவிக்கு சுமந்தரை வைக்கவேண்டும்.

 
    சங்கரியை  சரிக்கவேண்டும்   அதற்காக   அவர்மகனின்
கனடாப்பிரேரணையை யெனிவாப்பேரவையில் கனடா சமர்ப்பிக்காது
     கெடுக்கவேண்டும் என்று கெடுத்துவிட்டார்கள்.தங்களை
மக்கள் இனங்காணக் கூடாது  என்பதற்காக அடிக்கடி அறிவித்தல்
   விட்டுக்கொண்டிருக்கிறார்கள் சம்மந்தரும் சுமந்திரனும்.
முக்கூட்டு மாத்திரையாகிவிட்ட அரசு சம்மந்தர்  சுமத்திரன் சுத்துமாத்து.
    தொடரவிட்டால் முள்ளிவாக்காலை விடப்பேராபத்து.
தட்டிக்கேளுங்கள் நியமன எம்பியை  கட்டிப்போடுங்கள்.ஆபத்து ஆபத்து
   எதிரிபாவித்த சங்கரியரை தமிழர்பாவிக்க சந்தர்ப்பம்தேடுங்கள்.
எமில்டாவை யெனிவாக்கம் பிப்பைன்சிற்கும் ஏற்றி இறக்கிய
  தந்திரமந்திரத்தை உடைக்க விருதுபெற்ற சங்கரியைக்கொண்டு
துரும்பெடுத்து உலகத்திற்கு உணர்த்திவரச் செய்யுங்கள் பேச்சுக்களில்
    பங்குபற்றச் சொல்லுங்கள் அவர்கதைகேட்ட உலகம் இப்பவும்
தற்போது தமிழரை மகிந்தர் நடத்தும் விதத்தை சொல்லவிடுங்கள்.
   வடக்கில் சொற்ப ஆமியாம் மகிந்தர் நியோக்கில் சொன்ன பொய்.

 பிரேமச்ந்திரனையும் பின்தள்ளியது ஏன்? தமிழரசுக்கட்சியும்  ஏற்று

உருவானதுதானே தமிழர்விடுதலைக்கூட்டணி அதையே ஏற்று எல்லாரும்செயற்படலாம்

அதில் உடன்பாடு இல்லையேல் தமிழரசுக்கட்சி என்பதையும் துாக்கிப் பிடிக்கக்கூடாது.

வேலுப்பிள்ளை அவர்களின் விருப்புணர்ந்து உருவானதுதான் தமிழரசுக்கட்சியை மையப்படுத்திய

தமிழ்.தேசியக்.கூட்டமைப்பு அன்பிற்குரிய மாவை அய்யா தலையிட்டு சுதத்திரனைக் கொஞ்சம் சும்மா இருக்கச் சொல்லுங்கள் அவருடன் இரகசியமேதும் பேசாதீர்கள்  அவர்யாரின் நண்பரென்று உணர்ந்து நடவுங்கள்.

 
 பொங்குதமிழ் மக்கள் வெள்ளாத்தால் பொங்குவதைவிடவும் கொள்கைகளும் சீர்திருத்தத்தாலும் பொங்கவேண்டும்.(+.-)
16.09.2011.திருவள்ளுவராண்டு.2042- யெனிவாவிற்கு சென்று என்ன செய்யவேணும் என்ன செய்யக்கூடாது.குமரிநாடு.நெற்...

 1.யெனிவா முன்றலில் முருகதாசின்  தசைகள்  நெருப்பில் உருக்கப்பட்ட தமிழர்களின் புனிததேசம் என்பதை உலகஉறுப்பினர்கள்  கூடியிருக்கும் வேளையில் முதல்வணக்க நிகழ்வு மூலம் விளக்கலாம். முருகதாசிற்கே முன்னுரிமை பெரியபடம் சிறப்புபீடம் தமிழர்களின் பண்பாட்டை உணர்த்தும் செப்பு அல்லது பித்தளைப் பெரிய குத்துவிளக்கு (அமங்கலம்) என்பதால் ஒற்ரை திரிமட்டும் எரியவேண்டும்.

2.எல்லாத்தமிழர்களுக்கும் உணர்வுஉண்டு இதைச் சரியாகப் பயன்படுத்துவதே இன்றைய தேவை. எனவே எமது கோரிக்கைக்கோசங்கள் பழையபல்லவிகளாக இருக்கக்கூடாது. திருத்தமானவைகளாக  திட்டமிடப்பட்டு கட்டுப்பாட்டுன் செயலாற்றும் மக்களாக காண்பிக்கப்படவேண்டும். எடுத்துச்செல்லப்படும் படங்கள் அரசின் பயங்கரவாதஅழிப்பு அபிவிருத்தி மீள்குடியேற்றம் என்பவற்றின்  ஏமாற்றை உடைப்பதாக அதாவது அரசதரப்பு திரு.அமரசிங்க அமைச்சரவர்கள் இங்கே அவைக்குள் கூறியதற்கு ஏற்பநாட்டில்  எம்உறவுகளின் நிலை இல்லை. மதிப்பிற்குரிய நவநீதம்பிள்ளை அவர்கள் கூறியது போல் மக்களின் உரிமைகள் மதிக்கப்படாது அழிக்கப்பட்டார்கள்  என்ற சான்றுகளை முன்வைப்போம்.

3.மதிப்பிற்குரிய. நவநீதம்பிள்ளைக்கும்  ஆதரவுநாடுகளுக்கும்  அவர்களின் நீதிக்கும் நன்றிகளைத்தெரிவிப்போம். அய்.நா.சபை நிபுணர்குழு அறிக்கையை மனிதஉரிமைகள் சபைக்கு  அனுப்பிவைத்த  செயலுக்கும் நன்றிதெரிவிப்போம்.  தமிழகமக்களுக்கு தமிழக முதலமைச்சருக்கு நன்றிதெரிவிப்போம்.சர்வதேசவிசாரணைக்கு கோருவோம். இலங்கையின்  சிங்கள அரசுகள் (இரு பெரியகட்சிகளும் இனப்பாரபட்சநீதி முறைகளைக் கையாண்டதாலேதான்)  தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தெரிந்திருந்தாலும்  அவர்கள்ளுக்கு வலுச் சேர்த்து கொடுத்து எமக்காகச் செயற்படவைக்கமுடியும். இந்தியா இத்தருணத்திலாவது  இலங்கைக்கு முண்டு கொடுப்பதை நிறுத்த சர்வதேசத்தின் மூலம் அழுத்தம் ஏற்படும். இது தமிழக முதலமைச்சர் செல்வி யெயலலிதா அவர்களின் இருதீர்மானங்களுக்கும் வலுச்சேர்க்கும் காரியத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

4.இறுதிப்போரின் போது மக்களின் துன்பங்களைத் தாங்கமுடியாது  உலககவனம் தமிழர்கனைக் கவனிக்கவில்லை என்றகவலையில் இப்பகுதில் இத்திகதியில் தனக்க தானே  தீயிட்டு இறந்தார். அங்குஉறவுகள் இறந்தகவலை ஒருபக்கம் இங்கு இவர் இப்டி இறந்தது ஒருபக்கமாக துயர்கள் இரட்டிப்பானது. துடித்தோம் உலகம் (இந்தியா. சீனா. பாக்கிசுதான் )போன்றநாடுகள்  இலங்கைக்கு உதவிகள் புரிந்தன வேறெந்தமனிதாபிமான முள்ளநாடுகளும் ஆறுதல்  தரவில்லை  தமிழர்களைக் காப்பற்றவில்லை . மாறாக  எம்மை அழித்துக்கொண்டிருந்தவர்களுக்கு உதவிசெய்வதை உணர்ந்து தவித்தோம். இது தமிழர்களின் மனங்களில் வடுவாகிவிட்டது.

5.எல்லா நாடுகளிலிருந்தும் தமிழர்கள் வருவதுடன்  இப்போராட்ட இலக்கு வெற்றியாகிவிடமுடியாது. என்ன செய்தோம் என்னசெய்யப்போகின்றோம் என்பதை அறிந்து வருதலே  முக்கியமானது. இன்றைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பயணநேரத்தையே பயிற்சிப்பட்டடையாக மாற்றலாம்.தமிழினம் தமிழ்மொழி இன்று
உலகில் தமிழர்களாக  உள்ளநாம் தமிழ்மொழிக்கு  கொடுக்கவேண்டிய மொழி அந்தசு. முதலில்  எதிர்காலச்சந்ததியினரை தமிழில் கையொப்பமிடச் செய்தல். இந்துக் கொண்டாட்டங்களை விடுத்து  தமிழ்க் கொண்டாட்டங்களை  அறிந்து முன்னுரிமை கொடுத்தல். தமிழர்களின் தோற்றம் இந்தியாவில் அல்ல குமரிக்கண்டத்தில்  என்ற அறிவியலைப் பாய்சல்.

6..தற்போது உலகசூழலில்  இப்போராட்ட மூலம்  எம்மை ஏற்கசெய்வது  அதற்குதகநடந்து கொள்வது தான் மையக்கரு இதைசெயற்படுத்தினால்  நன்று  இல்லையேல் புதியபானையில் பழையசோறு என்ற கதைதான். முன்புபோல் முடிவையோ விளைவுகளையோ பற்றிச் சிந்திக்காது ஏதாவதுஒன்றை செய்து கொண்டு இருக்கின்றோம் என்ற நிலை எதிர்மறை விளைவுகளைத்தான் தரும் இதற்கு இவ்வளவு பெரிய ஏற்பாடுகள் தேவைதான?.

செய்யக்கூடாதவை

1.யெனிவா  முன்றலுக்கண்மியமாக  கோப்(coop) என்ற வர்த்தகநிலையத்தில் மதுபானப் போத்தல்களும்  சேர்வைக்  குவளைகளும் வாங்கப்பட்டு அப்பகுதியில் நின்று கூட்டம் கூட்டமாக மதுஅருந்தும் காட்சி  படப்பிடிப்பு  கருவிகளில் பதிவாகும் என்பதை நாம் கருத்தில் கொண்டு செயற்படவேண்டும். எமக்கு எதிரானவர்கள் இவற்றை ஊடகங்களில் போடுவார்கள் .

2.கழிவுப்பொருட்களை கண்டஇடங்களில் வீசினால் வீதிகளில் இடையுறுகளை ஏற்படுத்தினால் சுவிசுமக்கள் எம்மை வெறுப்பார்கள். எம்மைப்பற்றி நனறாக எழுதத் தக்கஎதையும் செய்யுங்கள்.

 

பொங்குதமிழா இன்றுமாலைவரை காத்திருங்கள்.தமிழகச் செங்கொடிதியாகியின் பெரியளவிலான உருவப்படம் அய்.நா.முன்

 

19.09.2011 இன்று சுவிற்சர்லாந்து யெனிவாநகரில் பொங்குதமிழ் நிகழ்வு அய்.நா.முன்றலில் தமிழ்மக்களின் உணர்வுநிகழ்வுகளுடன் இடம்பெற்றது. இம்முன்றலுக்கு 2கி.மீற்றர் தொலைவில்உள்ள யெனிவா நகரத்திற்கு அண்மியமாக உள்ள திடலிலிருந்து எழுச்சி ஊர்வலம் ஆரம்பமானது. தமிழகத்தில் தியாகியான குமாரி செங்கொடியின் பெரியளவிலான உருவப்படம் மாலைகளுடன் எடுத்து வரப்பட்டது அவருக்கு முன்பாக தமிழர்களின் பாரம்பரியஇசைக்கருவியான பறை(பேரிகை)  இசைவாசித்து வந்தார்கள். அய்.நா.முன்றலை அண்மித்ததும் தமிழ் ஆடற்கலை மரியாதைகளுடன் பொங்குதமிழ் மேடை முன்றலுக்கு எடுத்துச்செல்லப்பட்டார். பின் அய்.நா முன்றலில் 2009 இல் ஈழத்தமிழருக்காக அய்.நா .முன்  தீக்குழித்த தியாகி முருகதாசு திடலில் முருகதாசு முத்துக்குமார் போன்று தமிழகத்தில் தீக்குழித்த தியாகிகளின் படங்களுக்கு சிறப்பு பீடங்கள் அமைக்கப்பட்டு   அழகான மலர்களாலும் மாலைகளாலும் அவர்களின் உருவப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

 

தியாகிகள் தீபம்ஏற்றுவதற்கான  ஏற்பாடுகளும்   செய்யப்படடிருந்ததுடன் முருகதாசிற்கும் முத்துக்குமாருக்கும் நடுவில் தியாகிசெங்கொடியின் உருவப்படம் வைத்து தியாகதீபம் ஏற்றவும் மலர்கள்துாவி அஞ்சலிகள்  செலுத்தவும் ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தது. கொடியேற்ற நிகழ்வின்பின் இசைகள் முழங்க மகளீர் அணியினர் செங்கொடியின் உருவப்படத்தினை  தியாகிகள் பீடத்திற்கு அண்மியமாக எடுத்துவரப் பட்டவேளையில்  மக்கள் திரளாக உணர்வுமேலிட்டு நின்று  அஞ்சலி செலுத்திக்   கொண்டருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதனைத்தொடர்ந்து தீபங்கள் ஏற்றப்பட்டபின் ஏனைய வழமையான நிகழ்வுகள் இடம்பெற்றன. பொங்குதமிழ் மேடையில் பொங்கல் பானைப் படங்கள் ஏதும் காணப்படவில்லை. அதேபோன்று மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் பெரியபடங்கள் சுலோகங்கள்  ஏற்பாடுகள் பெரியளவில் காணப்படாதது ஒரு குறையாகவிருந்தது. இலண்டன் பிரான்சு யேர்மன் இத்தாலி சுவிற்சர்லாந்து போன்ற அய்ரோப்பிய நாடுகளிலிருந்து பேருந்துகள் சிற்றுந்துகள் மூலம் வந்திருந்த மக்கள் 3000 முதல் 4000 வரையிலானவர்கள்  அய்.நா முன்றலில் குழுமினர். தீயாகிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை வரவேற்கதக்க ஒன்றாகும். பொங்குதமிழ் மேடையில் வழமையான வர்களின் உரைகள் வழமையான தீர்மானங்கள்

 

 

 

 

 

 

இடம்பெற்றது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.