23.09.2011.திருவள்ளுவராண்டு.2042-உலக தமிழ் பண்பாட்டியக்கத்தின் 11ஆவது சர்வதேச மகாநாடு நாளை காரிக்கிழமை(சனிக்கிழமை) பிரான்சில் பக்கல்(திகதி)24.25.கன்னி(புரட்டாதி )2010.இல்ஆரம்பமாகிறது.பரிசு(ஸ்) எவ்ரி அகோரா மண்டபத்தில் இரு நாட்களுக்கு நடைபெறும் இம்மகாநாட்டில்
இலங்கை, இந்திய, மலேசியா உட்பட உலகின் பலபாகங்களிலும் உள்ள தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.கவியரங்கம், ஆய்வரங்கம், தமிழ் ஆவண கண்காட்சி, தமிழ் அறிஞர்களின் சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற உள்ளன.இந்தியாவிலிருந்து தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராசா, தொல் திருமாவளவன், இலங்கையிலிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எஸ்.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தால் ஐரோப்பிய நாடு ஒன்றில் நடத்தப்படும் முதலாவது சர்வதேச மகாநாடு இதுவாகும்.