கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி வார வெளியீட்டின் ஆசிரியர் வி.தேவராச், செய்தி ஆசிரியர் பற்குணம் ( ராயா மேத்தா) வீரகேசரி தினசரி பிரதம ஆசிரியர் பிரபாகரன், பிரதி ஆசிரியர் சிறிகயன், தினக்குரல் தினசரி பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம், சுடர்ஒளி செய்தி ஆசிரியர் சிவராயா, ஆகியோருடன் ஊடகவியலாளர் வித்தியாதரனும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேச் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி, எம்.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்மைக்காலத்தில் தமிழ் பத்திரிகைகளிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாகவும் அவர்கள் அரசுடன் நடத்தும் பேச்சுக்கள் தொடர்பாகவும் கடும் விமர்சனம் எழுந்ததையடுத்தே தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தும் முகமாக இச்சந்திப்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்தோடு த.தே.கூ.அமைப்பும் தமிழ்த்தரப்பும் பலமாவதை சம்மந்தர் தடுக்கின்றார் அதற்காகவே சுமத்திரனை பயன்படுத்துகின்றார். சுமத்திரன் புதியவர் என்பதாலும் பழைய அரசியல் வாதிகளை அனுசரித்து போகவேண்டிய நிலைப் பாட்டையும் சுமத்திரன் எடுத்து இறங்கிவரவேண்டும். சங்கரி அவர்களைப் பயன்படுத்த விடாது தடையாக இருப்பவர்கள் சம்மந்தர் அய்யாவும் தான்.மங்கள முனசிங்க தெரிவுக்குழுவின் அறிக்கை, சந்திரிக்கா முன்வைத்த தீர்வுப்பொதி, கடந்த காலங்களில் தமிழ் தரப்பால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட ஆலோசனைகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தீர்வு திட்டம் பற்றி பேசலாம் என தாம் அரச தரப்பிடம் தெரிவித்திருப்பதாகவும், பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப் படாது குறிப்பிட்ட காலத்தில் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதை தாம் அரச தரப்பிற்கு வலியுறுத் தியிருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையின் மூலம்தான் தீர்வு காண வேண்டும் என சர்வதேசமும் விரும்புவதாகவும், பேச்சுவார்த்தைக்கு செல்ல தயங்கினால் சர்வதேசத்தின் ஆதரவை நாம் இழக்க வேண்டியவரும் என்றும் பத்திரிகை ஆசிரியர்களிடம் சம்பந்தன் தெரிவித்தார்.
நாம் இப்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு சென்றிருப்பது குறித்து யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். இச்சந்திப்பு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்றது.