இந்த அறிக்கையில் 2010 ஜுலை தொடக்கம் 2011ஜுன் வரையிலான ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
சில நாடுகள் விடயத்தில் ஐ.நா மனிதஉரிமை பேரவையின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமைந்த போதும், முக்கியமான மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, பஹ்ரெய்ன் ஆகிய நாடுகள் விடயத்தில் நடவடிக்கை எடுப்பதில் தோல்வியைச் சந்தித்துள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் ஐ.நா நிபுணர்குழு சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதற்கு நம்பகமான சாட்சியங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை இதுபற்றி மீள்விசாரணை நடத்த வேண்டும் என்றும் பர்ந்துரை செய்த்தாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை இன்னமும் சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் விவகாரத்தை மீள்விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மீள்விசாரணை செய்ய வேண்டும் என்றும் சிறிலங்கா அரசின் பொறுப்புக் செயற்பாடுகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்ற கவலையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
அனைத்துலக போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையை அமைத்தல் உள்ளிட்ட நிபுணர்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா பொதுச்செயலரை மனிதஉரிமைகள் பேரவை ஊக்குவிக்க வேண்டும் என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக் கொண்டுள்ளது.