தமிழர் ஊடகங்களின் தரம் எப்படி என்பதற்கு சான்றாக சுவிசுநாட்டின் தலைநகர் யெனிவா என்றுவெளியிடுகிறார்கள். ஒருநாட்டின் தலைநகரம் தெரியாத ஊடகங்களாகவே எமது ஊடகங்கள் இருக்கின்றன. ஏன் சொந்தநாட்டின் ஊர்களின் நிர்வாகப் பிரிவுகளே தெரியாது செய்திகள் வெளியிடுபவர்கள் தமிழர்கள். இதுதான் எமது ஊடகவியளாளர் தகுதி(யேணலசுகளின் தகுதி) ஒரு இனத்தின் சர்வதே தகுதி பேராசிரிகள் சட்டத்தத்துறையினர் ஊடகவியலாளர்கள் மூலம் வெளிப்படுகிறது என்பது உண்மை.
முன்பு தமிழர்தரப்பு இந்தியா என்ன இந்தியா. அமெரிக்கா என்ன அமெரிக்கா. இவற்ரை விடவும் நாங்களே தலைமையே பெரிய வியுகங்களை வகுக்கிறது எமக்கே வெற்றி நாமே வென்று வருகிறோம் என்று தமிழ் அப்பாவித்தனத் தரப்பை மாயையில் வைத்திருந்தது. போல் தான் இன்று அரசும் இராணுவ அறிவாளிகளையே உலகஅரங்கில் பாவித்து நாறிவருகிறது. பேருக்கு பக்கத்தில் சில கல்வமான்களை சட்டவான்களை வைத்துக்கொள்கின்றது. ஆனால் இலங்கைக்கு எதிரானது அத்தனையும் முன்பு புலிகளுக்கு எதிராக நார்த்தி வரப்பட்டது போல் இலங்கை தனிமைப்படுத்தப்படுகிறது. புலிகளை விட இலங்கை பலமான உலக இராணுவ பொருளாதார பிராந்திய வல்லரசுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது பக்கம் உதவிக்கு இழுத்துவைத்திருக்கிறது. இதற்கு உபகாரமாக தமிழர்களின் நிலங்கள் வளங்கள் பயன்படுதப்படுகிறது.
இந்தியா இப்போது நடித்தாலும் இறுதி விவாதத்தில் இலங்கையைக் காப்பாற்றும் நடவடிக்கையை எடுத்து இலங்கையை தனது கைக்குள் போடும் இதற்கு சீனா .பாக்கிசுதான் உறவை அகற்றவேண்டும் என்ற மறைமுக அழுத்தத்தை இலங்கைக்கு கொடுக்கலாம். இந்தஇழுபறியில்தான் முடிவு இருக்கிறது.
தமிழர்தரப்பு சரியான நேரத்தில் சரியான சிலவற்றை மட்டும் செய்து கொண்டு பிழையான பலவற்றை செய்து வருவது தெரிகிறது. சம்மந்தர் சுமத்திரன் இந்தவேளையில் சர்வதேச அறிமுகம் பெற்ற சங்கரியை ஓரங்கட்ட நடவடிக்கை எடுப்பதும் சிங்களத்தரப்பு நடவடிக்கைகளுக்கு ஒப்பானது. தமிழர்தரப்பு சங்கரி அவர்களைப் பயன்படுத்தவேண்டும். எதிர்த்தரப்பே பயன் படுத்திய£து என்றால் நாம் பயன்படுத்தக்கூடாதா?.
கனடாவில் நடைபயணம் நன்னுநடைபெற்றது போல் பொங்குதமிழ் நடக்குமா யெனிவாவில் தவறான அணுகுமுறையாக நடந்திருக்கிறது. சிலருக்கு விருத்தி பலருக்கு உள்ளுக்குள் அதிதிருத்தி.
மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு நட்டஈடு கொடுக்கப்படவில்லை முள்ளிவாய்க்காலில் எடுத்தசொத்துகள் வாகனங்கள் போன்ற உடமைகள் பிரதேசசபைகளிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படவேண்டும். அவசரமாகப் பதியப்பட்டது. தவறுகள் பின்னர் திருத்தப்படும்.